April 19, 2025, 5:14 AM
29.2 C
Chennai

“கொளத்தூர்லகூட வெள்ளத் தண்ணிய வெளியேத்தல”: மக்கள்! “பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு”: சுடாலின்!

chennaifloods 1
chennaifloods 1

கொளத்தூர்லகூட வெள்ளத் தண்ணிய வெளியேத்த முடில… என்று தமிழக முதலமைச்சர் மு.க.சுடாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால் வழக்கம்போல் பிரச்சினைகளை திசை திருப்ப மொழி அரசியலையும் தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் மீதான தாக்குதல்களை தொடுக்கும் கிறிஸ்துவ அஜெண்டாவுடன் கூடிய திராவிட அரசியலை கையிலெடுத்துள்ள சுடாலின், தைப்பொங்கல் திருநாளே தமிழ் புத்தாண்டு எனும் விதத்தில் களம் இறங்கியிருக்கிறார். சுதந்திர தினம் என்று என்றுகூடத் தெரியாத சுடாலினுக்கு ‘தைப் பொங்கல் அரசியல்’ ஒரு கேடா என்ற குரல்கள் சமூகத் தளங்களில் ஒலிப்பதைக் காண முடிகிறது.

தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தயாரிக்கப்பட்ட பைகளின் மாதிரி வெளியாகி உள்ளது. அவற்றில் ‘தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதனால் தை பொங்கல் நாளை மீண்டும் தமிழ் புத்தாண்டு நாள் என்று மாற்ற அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ALSO READ:  அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது... : பிரதமர் மோடி!

இந்நிலையில், ‘ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற சதித் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று, தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்.14 சித்திரை முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என்று உலகம் முழுதும் வாழும் தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஹிந்து மதத்தை பின்பற்றுகிற மக்கள் மட்டுமல்ல; அனைத்து தமிழர்களுமே தமிழ்ப் புத்தாண்டை நல்ல காரியங்கள், தொழில் துவங்குவதற்கு ஏற்ற நாளாகக் கருதி, மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது திமுக., அரசு வேதாளம் முருங்கை மரம் ஏறுவதைப் போல, தமிழர்களை ஏமாற்ற நினைத்து தமிழ்ப் புத்தாண்டு நாளை குழப்பி கொண்டிருக்கின்றனர்.

ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற சதித் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தை 1 தமிழ்ப் புத்தாண்டு என்று திமுக., அரசு கொண்டாடும் போலும்! ஏற்கெனவே கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, இதுபோல் தை முதல்நாள் புத்தாண்டு என்று திமுக., அரசு சார்பில் சட்டம் கொண்டு வந்ததும், தொடர்ந்து வந்த அதிமுக., ஆட்சியில் ஜெயலலிதா அதனை நீக்கி, மீண்டும் சித்திரையே தமிழ்ப் புத்தாண்டு என்று கொண்டுவந்ததும் வரலாறு.

ALSO READ:  கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

இனி அடுத்து பாஜக., ஆட்சிக்கு வரும், வந்து மீண்டும் இவர்களின் முயற்சிகளை எல்லாம் மாற்றும், அதற்குத்தான் திமுக.,வினர் வழி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும், சமூகத் தளங்களில் கருத்துகள் பகிரப் பட்டு வருகின்றன.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

Topics

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

Entertainment News

Popular Categories