ஒரு பிரம்மாண்டமான பாம்பு நெடுஞ்சாலையில் எங்கிருந்தோ வந்ததை பார்த்து, மக்கள் அப்படியே திகைத்துப் போனார்கள். சிலர் பரபரப்புடன் வீடியோ எடுக்க தொடங்கினர்.
அனகோண்டாக்கள் (Anaconda) தென் அமெரிக்காவில் உள்ள மித வெப்பக் காடுகளில் காணப்படும் மிகப் பெரிய, நச்சுத்தன்மையற்ற போஅஸ் வகையைச் சேர்ந்த பாம்புகளாகும்.
இவை மனிதர்களைத் தாக்கும் என்றாலும் அவர்களை இரையாகக் கொள்வதில்லை. பொதுவாக மீன்கள், ஆடுகள், குதிரைகள் ஆகியவற்றையே இரையாக உண்ணுகின்றன. இவை அதிகமாக நீரிலேயே வாழ்கின்றன. இது தமிழில் ஆனைக் கொன்றான் என்றும் கூறபடுகிறது
வைரலாகும் வீடியோவில், 25 அடி நீளமுள்ள பச்சை நிற அனகோண்டா, நெடுஞ்சாலையின் நடுவில் ஊர்ந்து செல்வதைக் காணலாம். மக்கள் தங்கள் கார்களை நடுவழியில் நிறுத்திவிட்டு, அனகோண்டாவை பார்க்க வெளியே வந்தனர்.
அவர்கள் தங்கள் தொலைபேசிகளில் அனகோண்டாவின் வீடியோக்களை பதிவு செய்வதைக் காண முடிந்தது. இறுதியில், அனகோண்டா நெடுஞ்சாலையைக் கடக்கும்போது சிலர் மற்ற கார்களை அந்த வழியாகச் செல்வதைத் தடுப்பதையும் காணலாம்.
நெடுஞ்சாலையை கடக்கும் அந்த அனகோண்டா பாம்பு, பின்னர் புதர்களுக்குள் சென்று மறைந்துவிடுகிறது.
வீடியோவின் பின்னணியில் மக்கள் பேசுவதைக் கேட்டால், இந்த சம்பவம் பிரேசிலில் நடந்தது போல் தெரிகிறது.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ‘snake.wild’ என்ற பயனர் பகிர்ந்துள்ளார் மற்றும் இதுவரை 194.5k வ்யூஸ்களை இந்த வீடியோ பெற்றுள்ளது.