இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா பறவைகள், விலங்குகள், பூச்சிகள் காடுகளில் செய்யும் குறும்புகள் அவற்றிற்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அவ்விதம் தற்போது அவர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில், பறவை ஒன்று நகரும் படிக்கட்டுகளின் கைப்பிடியில் அமர்ந்து கொண்டு அவற்றின் நகர்வில் இன்பம் காண்கின்றது.
இந்த வீடியோவை நேற்றைய தினம் தனது ட்விட்டர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை இதுவரை 6,204 பேர் லைக் செய்துள்ளனர். மற்றும் 1,032 பேர் ரீட்வீட் செய்துள்ளனர்.
இந்த வீடியோவிற்கான தலைப்பில் வாழ்வின் நோக்கம் மகிழ்ச்சியாக வாழ்வது இந்தப் பறவை அதைச் சரியாகச் செய்கிறது என பகிர்ந்துள்ளார்.
இதே போன்று சமீபத்தில் சுசந்தா நந்தா பகிர்ந்த மற்றும் ஒரு வீடியோ அதிகம் பார்க்கப்பட்டது. அதில் குழந்தை ஐஸ்க்ரீம் வாங்கும் போது கடைக்காரர் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவிக்க குழந்தை உடனே அங்கு ஒலிக்கும் பின்னணி பாடலுக்கு நடனம் ஆடத் தொடங்குகின்றது.
உடனே கடைக்காரர் சிரித்த முகத்தோடு சிறுமியின் அருகில் வந்து முத்தமிட்டு உடன் ஆடி மகிழ்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் வைரலானது.