பெரும்பாலான மக்கள், கோபம் வரும் வேளையில் அமைதியை கடைபிடிப்பது வழக்கம். இன்னும் சிலர் தங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம் நடக்கும் போது அதனை வெளிப்படையாக சொல்லாமல் சிறுபிள்ளை போல மௌனம் சாதிப்பார்கள்.
உணர்வுகள் சார்ந்த விஷயம் என்பதால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், மனிதர்களை போலவே செல்லப்பிராணிகளும் நடந்துகொண்டால் எப்படி இருக்கும். அதை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹட்சன் என்ற செல்லப்பிராணி நாய் ஒன்று தனது உரிமையாளர்களுடன் காரில் வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தது. ஆனால் மிகவும் சோகமாக இருந்தது.
காரணம் பின் இருக்கையை ஒரு நபருடன் பகிர்ந்து கொண்டதில் அதற்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்பது தான். அருகில் இருந்த நபரோ நாயை வருடியபடி செல்லமாக அழைத்தார்.
இருப்பினும் கோபத்தில் இருந்த நாய் அவரை திரும்பிக்கூட பார்க்க விரும்பவில்லை என்பது போல, மீண்டும் சோகமாக சீட்டின் மீது தலையை சாய்த்துக் கொண்டது.
இதனை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நாயின் உரிமையாளர் வீட்டிற்கு செல்லும் வரை சைலண்ட்டாக தான் இருக்க போகிறது என்று சிரித்தபடி கூறுகிறார்.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த உரிமையாளர் “வீடு செல்லும் வரை அமைதியான சிகிச்சை” என்று கேப்ஷன் செய்திருந்தார். மேலும், ஹட்சனுக்கு பின் இருக்கையைப் பகிர்வதில் மகிழ்ச்சி இல்லை என்றும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பலரின் மனதை கவர்ந்து வருகிறது. மேலும், எண்ணற்ற லைக்குகளை, கருத்துக்களையும் பெற்று வருகிறது. நாய்கள் எப்போதுமே புத்திசாலிகள் என்பதில் சந்தேகமில்லை.
அவை செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் ரசிக்கத்தக்கவையாக இருக்கும் என்பதற்கு இந்த வீடியோவும் ஒரு எடுத்துக்காட்டு.