வைகுண்ட ஏகாதசி.. நாளை விடுமுறை: திருச்சி ஆட்சியர்!

srirangam-paramapatha-vasal
srirangam-paramapatha-vasal

நாளை, டிசம்பர் மாதம் 14ம் தேதி திருச்சி மாவட்டம் முழுவதுமாக உள்ளூர் விடுமுறை அறிவித்து திருச்சி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். இது பூலோக வைகுண்டம் என வைணவ பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

இந்த வருடம் ஏகாதசி டிசம்பர் 14ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சி மாவட்டம் முழுவதும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.

இந்துக்கள் பண்டிகையில் வைகுண்ட ஏகாதேசி மிகவும் புனிதமான பண்டிகையாக பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் தமிழகத்தின் அனைத்து வைணவ ஆலயங்களிலும் சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடைபெறும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்பு உற்சவம் மிகவும் விமர்சையாக நடைபெறும். எனவே, அன்றைய தினம் ரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்து போவார்கள். இதை முன்னிட்டு அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,’திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நாளை, டிசம்பர் 14ம் தேதி வைகுண்ட ஏகாதசி பெருந் திருவிழாவை முன்னிட்டு, அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறை திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும்.

அதேசமயம், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு டிசம்பர் 18 ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories