7 மாதம் இதயத்துடிப்பை நிறுத்தி உயிர்த்தெழும் தவளை!

frog 1 - 2026

7 மாதங்கள் -29 டிகிரி செல்சியஸில் உறைந்து, பருவகாலத்தில் உயிர்த்தெழும் அதிசய மரத்தவளை குறித்து இன்று தெரிந்துகொள்ளலாம்.

உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும், பல்வேறு விதமான காலநிலையை கொண்டது ஆகும். அமெரிக்காவும் அதனைப்போலத்தான். பாலைவனம், மலைச்சிகரங்கள், பனிசூழ்ந்த பகுதிகள், பள்ளத்தாக்கு மற்றும் சமவெளிப்பகுதிகள் என தன்னகத்தே பல விதமான நிலப்பரப்புகளை கொண்டுள்ளன.

இவற்றில் அலாஸ்கா மாகாணத்தில் வருடத்தின் 7 மாதங்கள் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும். செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் பனிக்காலத்தில், -2 டிகிரி செல்ஷியஸில் தொடங்கும் குளிர், அக்., நவ., டிச., ஜன., என ஏப்ரல் வரை 7 மாதங்களில் -29 டிகிரி வரை சென்று, மே மற்றும் ஜூன் மாதத்தில் -9 டிகிரி அளவில் இருக்கும்.

இடைப்பட்ட ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1 டிகிரி, 2 டிகிரி என வெப்பம் பதிவாகும். அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு, அங்குள்ள தட்பவெப்ப சூழ்நிலை பழகியது என்றாலும், அவ்வப்போது ஏற்படும் கடுமையான குளிர் புயலை எதிர்கொள்ளவும் தயாராகத்தான் இருப்பார்கள். அங்கு நடைபெறும் கட்டுமான பணிகள் அனைத்தும் மே, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே பெருமளவு நடைபெறும்.

வருடத்தின் 7 மாதம் இதய ஓட்டம் மற்றும் இரத்த ஓட்டத்தை நிறுத்தி, பனிக்குள் உறைந்து பின்னர் பருவகாலம் வந்ததும் மீண்டு வரும் அதிசிய மரத்தவளை அங்கு இருக்கிறது. இதை இயற்கையின் அற்புதம் என்றும் கூறலாம்.

கிட்டத்தட்ட 7 மாதங்கள் வரை எவ்வித உணவும் இல்லாமல், உடலில் இரத்தம் பாயாமல், உடலின் தோல் பகுதிகள் முதல் இதய பகுதிகள் வரை உறைந்து, உடல் அழுகாமல் பனி பார்த்துக்கொள்ள, பருவகாலம் வந்ததும் பனி உருகி தவளை மீண்டும் தனது வாழ்நாளை தொடங்குகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories