சென்னை: 20ந் தேதி நிலம் கையகப் படுத்தும் சட்டத்தை கண்டித்தும் போராட்டம்நடத்தப் படுமென -கருணாநிதி அறிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு; கட்சிப் பேதமின்றி அன்றாடம் நடைபெறும் கொலை, கொள்ளைகளோ கேட்கவே வேண்டியதில்லை. எனவே, மத்திய அரசு பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பையும் மீறி நிலம் கையகப் படுத்தும் சட்டத் திருத்தங்களை மக்களவையில் நிறைவேற்றிவிட்டு,மாநிலங்களவையிலும் நிறைவேற்றிட முயற்சிப்பதைக் கண்டித்தும்; அரசு அதிகாரி ஒருவரின் தற்கொலைக்குக் காரணமான அமைச்சர் மீதுகுற்ற நடவடிக்கைகள் எடுத்து, அவரை உடனடியாகக் கைது செய்வதோடு,வழக்கினை சி.பி.ஐ. மூலமாக விசாரிக்க ஒப்படைத்திட வேண்டு மென்பதை வலியுறுத்தியும்; திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 20-3-2015அன்றுவெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணியளவில், அனைத்து வருவாய்மாவட்டங்களிலும் ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் முன்னால் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திடும் வகையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திடக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
20ந்தேதி நிலம் கையகப் படுத்தும் சட்டத்தை கண்டித்து போராட்டம்: கருணாநிதி
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

