தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நன்றாக விளையாடிக் கொண்டிருப்பதால் எதிர்வரும் போட்டிகளில் எந்த ஒரு மாற்றமும் செய்யப் போவதில்லை என கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். நாளை மார்ச் 14ம் தேதி, இந்திய அணி ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி குறித்து இந்திய கேப்டன் தோனி கூறுகையில், தற்போதுள்ள சூழலில் பிளேயிங் லெவனில் எவ்வித மாற்றமும் இல்லை என கூறினார். மேலும் வீரர்கள் அனைவரும் முழு உடற்தகுதியுடன் உள்ளனர். ஒருவேளை திடீர் காயம் ஏற்பட்டால் மட்டுமே வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்றார். களத்தில் பங்கேற்கும் போது பிட்சுக்கு ஏற்றவாறு செயல்படுவதே இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளது. ஒவ்வொரு ஆட்டத்திலும் பிட்ச்கள் சற்று வேறுபட்டு காணப்படும் அதை உணர்ந்துகொண்டு செயல்பட வேண்டும். மேலும் வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபடும் போது பேட்ஸ்மென்கள் புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றனர் என்றார்.
எதிர் வரும் போட்டிகளில் இந்திய அணியில் மாற்றம் இல்லை: தோனி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Popular Categories