இஸ்ரேல் சைபர்செக்யூரிட்டியுடன் கை கோர்க்கும் கூகுள்!

google - 2026

உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் தொடர்ந்து புதிய துறையில் முதலீடு செய்து வரும் நிலையில் கூகுள் தனது பழைய கசப்பான அனுபவத்தின் காரணமாகப் புதிய திட்டத்தில் பெரிய அளவிலான முதலீட்டையும், விரிவாக்கத்தைச் செய்ய மனம் இல்லாமல் உள்ளது.

ஆனால் இதேவேளையில் தற்போது கூகுள் தற்போது இருக்கும் சேவையில் மிகப்பெரிய அளவிலான மேம்பாட்டைச் செய்யவும், புதிய முறை தேடல் சேவையில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழரான சுந்தர் பிச்சை தலைமையில் இயங்கும் கூகுள் நிறுவனம் தற்போது இண்டர்நெட் உலகில் இருக்கும் மிக முக்கியப் பிரச்சனையாக விளங்கம் சைபர் அட்டாக் பிரச்சனையைத் தீர்க்கவும், இந்தச் சைபர் அட்டாக் பாதிப்பில் இருந்து தனது நிறுவனத்தையும், நிறுவன சேவைகளையும், சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது.

கடந்த 2 வருடத்தில் குறிப்பாகக் கொரோனா தொற்று, லாக்டவுன் பாதிப்பு ஏற்பட்ட காலகட்டத்தில் உலகம் முழுவதும் பல முன்னணி நிறுவனங்களின் தரவுகள் திருடப்பட்டது, இதில் பல முன்னணி இந்திய நிறுவனங்களும் உள்ளது. இந்தச் சைபர் அட்டாக் நிறுவன தளத்தில் மட்டும் அல்லாமல் தனிநபர் தளத்திலும் ஏற்படுகிறது.

இந்தப் பிரச்சனையை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்ற திட்டத்தில் தீவிரமாக இறங்கிய கூகுள், இஸ்ரேல் நாட்டின் முன்னணி சைபர்செக்யூரிட்டி ஸ்டார்ட்அப் நிறுவனமான Siemplify-ஐ சுமார் 500 மில்லியன் டாலருக்கு கைப்பற்றியுள்ளது.

ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!
sundar pitchai - 2026

தற்போது கூகுள் கைப்பற்றியுள்ள இஸ்ரேல் நாட்டின் Siemplify நிறுவனத்தைக் கூகுள் கிளவுட் பிளார்ட்பாரம் பிரிவில் Chronicle operation உடன் இணைக்க உள்ளது. இஸ்ரேல் நாட்டின் Siemplify நிறுவனம் என்ட் டு என்ட் செக்யூரிட்டி சர்வீசஸ்-ஐ நிறுவனங்களுக்கு அளிப்பதில் திறன் வாய்ந்த நிறுவனமாக விளங்குகிறது.

Siemplify நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் இருதரப்பு நிறுவனங்களுக்கும் பெரிய அளவில் நன்மை உண்டு எனக் கூகுள் நிறுவனத்தின் கிளவுட் செக்யூரிட்டி பிரிவின் பொது மேலாளர் மற்றும் கூகுள் துணைத் தலைவரான சுனில் பொட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் கூகுள் அடுத்த 5 வருடத்தில் சைபர் செக்யூரிட்டி பிரிவில் சுமார் 10 பில்லியின் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டில் பல நிறுவனங்கள் அதிநவீன தொழில்நுட்பத்தை வைத்துள்ளது கம்யூட்டர் டெக்னாலஜி மட்டும் அல்லாமல் ஆயுத தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்குகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories