ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட வலிப்பு.. பேருந்தை ஓட்டி பயணிகளை காத்த பெண்!

lokitha - 2026

நாள்தோறும் ஏதாவது ஒரு செய்தி, வீடியோ வைரலாகி வருவது வழக்கமாகிவிட்டது. சில வீடியோக்கள் மனதை உலுக்கும் வகையில் இருந்தாலும், சில வீடியோக்கள் மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடும்.

சில செய்திகள், நம்பிக்கையை தரும். அந்த வரிசையில், குழந்தைகள், பெண்களை ஏற்றிக்கொண்டு பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு திடீரென் வலிப்பு ஏற்படவே, பெண் பயணி ஒருவர் பேருந்தை இயக்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் உள்ள வேளான் சுற்றுலா மையத்திற்கு சுற்றுலா சென்றிருந்த குழு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

குழந்தைகளும், பெண்களும் அடங்கிய அந்த குழு சென்ற பேருந்தை ஆண் ஓட்டுனர் ஒருவர் இயக்கியுள்ளார். சுற்றுலா முடிந்து திரும்பி கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கிறது.

வலிப்பு ஏற்பட்டதால், கை கால்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார். அப்போது கூட்டத்தில் இருந்த 42 வயது பெண் பயணி ஒருவர், சமயோசிதமாக செயல்பட்டு பேருந்தை இயக்குவதாக உறுதி அளித்திருக்கிறார்.

யோகிதா சாதவ் என்ற அந்த பெண், சிக்கலில் இருந்த குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் ஆறுதல் தந்து கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தூரம் பேருந்தை இயக்கி வந்துள்ளார்.

பேருந்தில் இருந்த பயணிகளை காப்பாற்றியது மட்டுமின்றி, தக்க நேரத்தில் பேருந்து ஓட்டுனரை மருத்துவமனையில் அனுமதிக்கவும் காரணமாகி இருக்கிறார்.

தனக்கு கார் ஓட்ட தெரிந்ததால், பேருந்தை ஓட்ட சம்மதித்ததாகவும், பேருந்து ஓட்டுனருக்கு சிகிச்சை அளிப்பதும், குழந்தைகள் மற்றும் பெண்களை காப்பாற்றுவதும் முக்கிய பணி என்பதை உணர்ந்ததாலும், தான் பேருந்தை இயக்கியதாக சொல்கிறார் யோகிதா.

இக்கட்டான சூழலில், தைரியமாக பேருந்தை இயக்க வந்த யோகிதாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. கூடவே இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories