March 25, 2025, 2:53 PM
32.4 C
Chennai

பார்ட்டியில் தன் ஜோடியை அடித்து ஆட வைக்கும் நபர்!

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்கள் மற்றும் விருந்துகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

திருமணங்கள் மற்றும் பார்ட்டிகளில் நடனம் மிகவும் பிரபலம். இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த பழக்கம் உள்ளது. எந்த விசேஷமான தருணமாக இருந்தாலும், அதில் மக்கள் நடனமாடுவதைக் காண முடிகின்றது.

இந்த நடன வீடியோக்களில் பல மிகவும் அழகாகவும், அற்புதமாகவும் இருக்கின்றன. இவை காண்பவர்களை மகிழ்விக்கச் செய்கின்றன. தற்போது இதுபோன்ற ஒரு நடன வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. ஆனால், இதைப் பார்த்தால் மகிழ்ச்சி இருக்குமோ இல்லையோ, அதிர்ச்சி கண்டிப்பாக இருக்கும்.

இந்த வீடியோவைப் (Viral Video) பார்ப்பவர்களால், தங்கள் கண்களையே நம்ப முடியாமலும் போகலாம். இந்த வீடியோவில் பலர் ஒரு விழாவில் நடனமாடிக்கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. ஆனால், அப்போது திடீரென ஒருவர் தனது பார்ட்னர் சரியாக நடனம் ஆடாததால், அவரை கன்னத்தில் அறையத் தொடங்குகிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பார்க்கும் நமக்கே இப்படி இருந்தால், அடி வாங்கிய அந்த பெண்ணுக்கு எப்படி இருக்கும் என அனைவரும் பரிதாபப்படுகின்றனர்.

வைரலாகி வரும் இந்த வீடியோவில், பல தம்பதிகள் ஒரு நிகழ்ச்சிகளுக்கு சென்றிருப்பதை காண முடிகின்றது. இவர்கள் அனைவரும் ஜோடிகளாக நடனமாடுகிறார்கள். ஆனால் இவர்களில் ஒரு ஜோடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த வீடியோவில், ஒருவர் தனது ஜோடியை மிக வேகமாக நடனமாட வற்புறுத்துவதைக் காண முடிகின்றது. இதனால் டென்ஷன் ஆன அந்த பெண், தவறான நடன அசைவுகளை செய்யத் தொடங்குகிறார். இதைப் பார்த்த அந்த நபருக்கு கோபம் வருகிறது.

கோவத்தின் மிகுதியால், அவர் தனது ஜோடியை அறையத் தொடங்குகிறார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த ஜோடி அவரைத் தடுக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர் அடங்குவதாக இல்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

சரியாக நடனமாடவில்லை என்பதற்காக ஒருவர் தனது நடன ஜோடியை அடிப்பது போன்ற வீடியோக்கள் அரிதாகவே காணப்படுகின்றன. ஆனால், கோவப்பட்டு அடிக்கும் நபரும் மிகச்சிறப்பாக ஆடுகிறார் என்று கூற முடியாது. அவரும் மிக சாதாரணமாகவே ஆடுகிறார். ஆனால் தான் சூப்பராக ஆடுவதாக அவருக்கு தோன்றுகிறது போலும்!!

இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் (Netizens) கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். வீடியோவின் தலைப்பில், “தவறாக நடனமாடினால், அடி கிடைக்கும்” என்று எழுதப்பட்டுள்ளது.

https://www.instagram.com/reel/CY3DKhXIINp/?utm_source=ig_embed&utm_campaign=loading

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: ஆச்சரியப்படுத்திய அதிரடி; ஆசுதோஷ் சர்மா விளாசலில் டெல்லி த்ரில் வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 24.03.2025

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

Topics

IPL 2025: ஆச்சரியப்படுத்திய அதிரடி; ஆசுதோஷ் சர்மா விளாசலில் டெல்லி த்ரில் வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 24.03.2025

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

நல்ல தொடக்கம் ஆகட்டும் என்று விரும்பினேன்.  ஆனால்… ஒவ்வொரு முறையும் நல்ல முயற்சியின் விளைவுகள், எதிர்மறையாகவே இருந்த்து.  அவர்களுக்கு நல்லபுத்தி ஏற்பட வேண்டும்,

பாரதத்தை இணைக்கும் ஒரே கலாசார இழை! : பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

காந்தியடிகளின் செயல்பாடுகளின் தாக்கத்தை, இன்றும் கூட பாரத நாட்டின் மீது, ஏதோ ஒரு வகையிலே… புலப்படுகிறது.  மேலும் காந்தியடிகள், எதை உபதேசித்தாரோ அதை வாழ முயற்சி செய்தார். 

தேசப் பணியில் ஈடுபட போடப்பட்ட வித்து: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

பொறுப்புகள் காரணமாக அவரால் வர முடியவில்லை என்றாலும் நான் முதல்வராக இருந்த போது வந்திருக்கிறார்.  அவருடைய ஆசிகள் எனக்கு நிரம்பக் கிடைத்திருக்கிறது.  அவர் தான் எனக்கு வழிகாட்டினார்,

Entertainment News

Popular Categories