May 12, 2025, 4:37 PM
35 C
Chennai

இன்ஸ்டாகிராம்: சப்ஸ்கிர்ப்ஷன் புதிய அப்டேட்..!

சமூகவலைதளங்களில் படங்களை பகிர்வதற்கு ஃபேஸ்புக் தளத்திற்கு அடுத்து மிகவும் முக்கியமான தளம் என்றால் அது இன்ஸ்டாகிராம் தான்

இந்த தளத்தில் பிரபலங்கள், பொது மக்கள் என அனைவரும் தங்களுடைய படங்களை பதிவிட்டு நண்பர்களிடம் இருந்து லைக்ஸ் பெற்று வருகின்றனர்.

அத்துடன் டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டா ரீல்ஸ்தான் பயனர்களிடம் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது.

இதனால் அவ்வப்போது இன்ஸ்டா செயலியில் ஒரு சில புதிய வசதிகளை அந்நிறுவனம் கொண்டு வந்து பயனர்களுக்கு சர்ப்ரைஸ் தருகிறது.

அந்த வரிசையில், யூட்யூப் சானலில் உள்ள சப்ஸ்கிர்ப்ஷன் ஆப்ஷனைப் போல இனி இன்ஸ்டாகிராமிலும், சப்ஸ்கிரிப்ஷன் ஆப்ஷன் வர உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இதற்கான சோதனை முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. இந்த அப்டேட் மூலம், ஃபாலோவர்ஸ் அவர்களுக்கு பிடித்த பிரபலங்களை, பார்க்க விரும்பும் கண்டெண்ட் பக்கங்களை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம்.

வீடியோ கண்டெண்ட் தயாரிப்பவர்களும், சப்ஸ்கிரைப்பர்களுக்கென தனி பிரத்யேக வீடியோ அல்லது புகைப்பட கண்டெண்ட் அடங்கிய பதிவுகளை பதிவேற்றலாம்.

ALSO READ:  அழகர்கோவில் அருகே மகா பெரியவா கோவில் பூமி பூஜை!

இந்த சப்ஸ்கிரிப்ஷன் வசதி மூலம், இனி இன்ஸ்டாவில் வீடியோ / ரீல்ஸ் பதிவேற்றம் செய்பவர்களுக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

யூட்யூபை போல, இனி இன்ஸ்டாகிராமிலும் பணம் சம்பாதிக்கலாம் என்பதுதான் இந்த லேட்டஸ்ட் அப்டேட்டின் ஒரு வரி விளக்கம்.

தொடக்கமாக, அமெரிக்காவில் இந்த அப்டேட் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கூடிய விரைவில், இந்தியாவுக்கு இந்த அப்டேட் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி “Subscriptions are for creators,” எனும் தலைப்புடன் வீடியோ ஒன்றை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

“சப்ஸ்கிரிப்ஷன்ஸ் மூலம் கிரியேட்டர்கள் தங்களின் நலம் விரும்பிகளுக்கு பிரத்யேக அனுபவம் வழங்கி அவர்களுடன் நெருக்கமாகலாம். சப்ஸ்கிரைபர் லைவ், சப்ஸ்கிரைபர் ஸ்டோரீஸ், சப்ஸ்கிரைபர் பேட்ஜஸ் என பலவிதங்களில் நலம்விரும்புகளுக்கு பிரத்யேக பதிவுகளை வழங்கலாம்,” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

வரும் மாதங்களில் இந்த சேவை படிப்படியாக அதிகரிக்கப்படும். முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில கிரியேட்டர்களுக்கு அமெரிக்காவில் மட்டும் இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. தேர்வு செய்யப்படும் கிரியேட்டர்கள் சப்ஸ்கிரிப்ஷன்களை விற்று பிரத்யேக தரவுகளை வழங்கலாம்.

ALSO READ:  IPL 2025: பெங்களூர், மும்பை அணிகளின் கம்பேக் வெற்றிகள்!

“இன்ஸ்டாகிராமின் ஒட்டுமொத்த அனுபவங்களுடன் சப்ஸ்கிரிப்ஷன்கள் ஒருங்கிணைக்கப்படுவதால், காலப்போக்கில் இதுபோன்ற அம்சங்களை நீட்டிக்க திட்டமிட்டுள்ளோம்,” என மொசெரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கள்ளழகர் திருவிழாவில் பக்தர் மரணம்; அமைச்சருக்கு இந்து முன்னணி கேள்வி!

இனியாவது இந்துக்களை மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் கருதாமல் இந்து கோயில் விழாக்களில் உரிய பாதுகாப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது

அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டு மட்டுமே!

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்கா தலையீடு இல்லாத சமாதானம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி: அன்னதானம், மருத்துவ முகாம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி பெருவிழா: அன்னதானம் மருத்துவ முகாம்!

வைகை ஆற்றில் கள்ளழகர் வேடத்தில் ஜனக நாராயண பெருமாள்!

சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் 50 ஆயிரத்திற்கும்

காவிரித்தாயே பெருகி வா

சித்ரா பௌர்ணமியான இன்று (12.05.25) மாலையில், ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபத்தில் உலக சித்தர்கள் சர்வசமய கூட்டமைப்பு மற்றும் சிவனடியார்கள்

Topics

கள்ளழகர் திருவிழாவில் பக்தர் மரணம்; அமைச்சருக்கு இந்து முன்னணி கேள்வி!

இனியாவது இந்துக்களை மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் கருதாமல் இந்து கோயில் விழாக்களில் உரிய பாதுகாப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது

அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டு மட்டுமே!

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்கா தலையீடு இல்லாத சமாதானம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி: அன்னதானம், மருத்துவ முகாம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி பெருவிழா: அன்னதானம் மருத்துவ முகாம்!

வைகை ஆற்றில் கள்ளழகர் வேடத்தில் ஜனக நாராயண பெருமாள்!

சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் 50 ஆயிரத்திற்கும்

காவிரித்தாயே பெருகி வா

சித்ரா பௌர்ணமியான இன்று (12.05.25) மாலையில், ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபத்தில் உலக சித்தர்கள் சர்வசமய கூட்டமைப்பு மற்றும் சிவனடியார்கள்

ராணுவத்தின் செய்தியாளர் சந்திப்பில்… ஊ(ட)கத்தனங்கள்!

ஆபரேஷன் சிந்தூர் எப்படி நடந்தது, என்ன நடந்தது என்பது குறித்து நாட்டுக்கு விளக்குவதற்காக, இன்று மாலை ஊடக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சித்ரா பௌர்ணமி விழா; வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்!

லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோவிந்தா பக்தி கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் - கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி மனமுருக

பஞ்சாங்கம் மே 12 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories