டெமு விரைவு ரயிலின் பயண நேரம் குறைப்பு!

train - 2026

திருவாரூர்- காரைக்குடி இடையே டெமு விரைவு ரயிலின் பயண நேரம் 7 மணி நேரத்திலிருந்து 4.45 மணி நேரமாக ஜன.26-ம் தேதி முதல் குறைக்கப்பட உள்ளது.

திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதையில் மொபைல் கேட் கீப்பர்களுடன் முதலாவது டெமு ரயில் திருவாரூரிலிருந்து காரைக்குடிக்கு 1.6.2019 முதல் இயக்கப்பட்டது. 149 கி.மீ தொலைவுள்ள இந்த தடத்தில் 20 ரயில் நிலையங்களும் 73 ரயில்வே கேட்டுகளும் உள்ளன.

இந்த ரயில்வே கேட்டுகளுக்கு கேட்மேன்கள் நியமிக்கப்படாததால், ரயிலிலேயே மொபைல் கேட் கீப்பர்கள் செல்வார்கள். அவர்கள் அனைத்து கேட்டுகளிலும் ரயிலில் இருந்து இறங்கி கேட்டுகளை மூடிவிட்டு, ரயில் கடந்த பிறகு கேட்டை திறந்து விடுவார்கள்.

இதன் காரணமாக 149 கி.மீ தொலைவை ரயில் கடக்க 7 மணிநேரம் ஆனது. இதனால், இந்த ரயிலில் பயணம் செய்ய அதிகமான பயணிகள் விரும்பவில்லை.

இந்நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக 21.3.2020 முதல் இந்த ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. பின்னர், முன்பதிவில்லா சிறப்பு விரைவு டெமு ரயில் 4.8.2021 முதல் இயங்கி வருகிறது.

தற்சமயம், திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை வரை உள்ள 40 கேட்டுகளுக்கு நிரந்தர பணியாளர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரயில்வே நிர்வாகத்தால் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, ஜன.26-ம் தேதி முதல் திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை வரை பயண நேரம் குறைக்கப்படுகிறது.

புதிய கால அட்டவணைப்படி, திருவாரூரில் காலை 8.15 மணிக்கு புறப்படும் ரயில் காலை 10 மணிக்கு பட்டுக்கோட்டைக்கும், பிற்பகல் 1 மணிக்கு காரைக்குடிக்கும் சென்றடைகிறது.

பின்னர், பிற்பகல் 3 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்படும் ரயில், பட்டுக்கோட்டைக்கு மாலை 5.34 மணிக்கும், திருவாரூருக்கு இரவு 7.45 மணிக்கும் சென்றடைகிறது.

இதன் மூலம் ரயிலின் பயண நேரம் 7 மணியில் இருந்து 4.45 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரயில் பராமரிப்புப் பணிகளுக்காக செல்வதால் இயங்காது.

மேலும், பட்டுக்கோட்டையிலிருந்து காரைக்குடி வரையுள்ள 25 கேட்டுகளுக்கு கேட்மேன்கள் நியமனம் செய்யப்பட்ட பின், திருவாரூரில் இருந்து காரைக் குடிக்கு பயணிகள் ரயில் 3.30 மணி நேரத்தில் செல்ல வாய்ப்புள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories