December 6, 2025, 6:53 PM
26.8 C
Chennai

அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை அதன் தீபமன்றோ.. நெகிழ வைக்கும் பாசவீடியோ!

bro sis bond - 2025

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

சகோதர சகோதரி உறவு மிகவும் இனிமையான ஒரு உறவாகும். தனது தங்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என அண்ணன் ஆசைப்படுவது வழக்கம்.

அண்ணன் இருக்கும் தங்கைகள் அண்ணன்களை தங்கள் அப்பாவாகவே கருதுகிறார்கள். இந்த வைரல் வீடியோவும் அப்படிப்பட்ட ஒரு அதிர்ஷ்டக்கார தங்கை பற்றியதுதான்.

இந்த வீடியோவில், பெண்ணின் அண்ணன்கள், அவரது மணநாளில், அவர் மேல் அன்பு மழை பொழிவதைக் காண முடிகின்றது.

இந்திய திருமணங்களில் பல வகைகள் உள்ளன. இந்தியாவின் சில பகுதிகளில், திருமணங்களில் அண்ணன் தங்கையை கையைப் பிடித்து அழைத்து வருகிறார்.

சில இடங்களில் அண்ணன் மணப்பெண்ணை தோளில் சுமந்து வருவது வழக்கம். எனினும், அனைத்து வகைகளும் ‘நீ திருமணம் ஆகி சென்றாலும், நான் உன்னுடன் என்றும் இருப்பேன்’ என அண்ணன் தங்கைக்கு அளிக்கும் வாக்குறுதியே மேலோங்கி இருக்கிறது.

இந்த வீடியோவில் நாம் காண்பது சற்று வித்தியாசமாக உள்ளது. இதில் ஒரு திருமணத்தில் வித்தியாசமான பாரம்பரியம் காணப்படுகிறது.

இங்கு மணமகளின் (Bride Video) சகோதரரகள் தங்கள் சகோதரியை மணமேடைக்கு வரவேற்கும் விதத்தை பார்த்தால், கண் கலங்குகிறது. இந்த வீடியோவைப் பார்த்து பல நெட்டிசன்களால் தங்கள் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லையாம்!!

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ‘witty_wedding’ என்ற பயனர் வெளியிட்டார். இந்த வீடியோ 8,100க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. துவக்கத்தில், அழகான சிவப்பு நிற லெஹங்காவில் மணமகள் திருமண மண்டபத்துக்குள் நுழையத் தயாராக இருப்பதை காண முடிகின்றது.

மணமகன் காத்திருக்கும் மேடை வரை மணமகள் நடக்க மலர் இதழ்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவருடைய சகோதரர்கள் பாதையில் மண்டியிட்டு அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது.

மணமகள் நடக்கத் துவங்கியவுடன், அவரது சகோதரர்கள், மலர் இதழ் பட்டும் அவர் பாதம் பாதிக்கப்படக் கூடாது என தங்கள் கைகளால் பாதத்தை தாங்குகிறார்கள்.

மணமகள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் ஒவ்வொரு சகோதரர் தன் கைகளால் தாங்கிக்கொள்கிறார். இது காண்பவர்களை கண் கலங்க வைக்கிறது.

மணப்பெண்ணின் சகோதரர்களின் இந்த இனிமையான சைகையை இணையவாசிகள் (Netizens) விரும்பி பார்த்து வருகின்றனர்.

குறிப்பாக பாசம் மிக்க அண்ணன், தங்கைகள் இந்த வீடியோவை அதிகம் பார்த்து வருகிறார்கள். இப்படிப்பட்ட அண்ணன்கள் கிடைக்க அந்த பெண் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories