மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாலியான சன்னாசிக்கு 4 மகள்கள் உள்ளனர்.
விவசாயப்பணிகளுக்கு சென்று கிடைக்கும் தொகையை வைத்து 4 மகள்களையும் படிக்க வைத்தனர். மூத்த மகளான தங்கபேச்சி, விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2020ல் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார்.
அந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண்ணில் வெற்றி பெற்றதால் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும் வறுமை காரணமாக மருத்துவக் கனவு நினைவாகவில்லை.
இதையடுத்து ஓராண்டாக விவசாய கூலி வேலைக்கு சென்று கொண்டே தனியார் நிறுவனத்தின் உதவியுடன் நீட் தேர்வு பயிற்சி பெற்றார்.
இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதிய அவர் வெற்றி பெற்று அரசு 7.5. சதவீத இட ஒதுக்கீட்டில் தேர்வானார்.
கன்னியாகுமரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயில அவருக்கு இடம் கிடைத்தும் கல்லூரிக்கு செல்லவும், புத்தகங்கள் வாங்கவும் போதிய வருமானமின்றி தங்கபேச்சி தவித்து வருகிறார்.
தங்கபேச்சிக்கு மேலும் 3 சகோதரிகள் உள்ள நிலையில், மருத்துவ படிப்பிற்கு பணம் செலுத்த முடியாமல் போனதால் அவருடைய மருத்துவ கனவு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.
இந்நிலையில், இந்த செய்தி வெளியானதை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாணவியை படிக்க வைக்க பாஜக உதவி செய்யும் என்றும், அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி அளித்துள்ளார்.
We will take care of sister Thangapachi who has cleared NEET & is in the process of becoming a Doctor from Madurai.
— K.Annamalai (@annamalai_k) January 31, 2022
It’s only because of our Hon PM Shri @narendramodi avl, she is able to get in through NEET.This is true social Justice.
We are in the process of contacting her! https://t.co/uGgFfwQ083