வேளாண் அதிகாரி தற்கொலை: அக்ரி கிருஷ்ணமூர்த்தி உதவியாளரிடம் சிபிசிஐடி விசாரணை

Published:

சென்னை:agri-krishnamurthy நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பூவையாவிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்ட வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி, கடந்த மாதம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கு வேளாண் துறை அதிகாரிகளும் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் கொடுத்த நெருக்கடிதான் காரணம் என்று கூறப்பட்டது. வேளாண் துறையில் தாற்காலிக ஓட்டுநர்கள் பணி நியமனத்துக்கு, மேலிடத்தில் இருந்து கொடுக்கப்பட்ட கடும் நெருக்கடியே காரணம் என்று வேளாண் அலுவலர்கள் கூறினர். இந்நிலையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேளாண்மைத் துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்து, வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கு சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை காவல் கண்காணிப்பாளர் அன்பு தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பூவையா என்பவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர், ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி. திருவண்ணாமலையில் வசித்து வருகிறார். நேற்று இவரை சென்னையில் வைத்து விசாரணை நடத்திய போலீஸார்,. அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் சில முக்கியக் குறிப்புகளைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்தனர். ப்படுகிறது.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img