சென்னை: நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பூவையாவிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்ட வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி, கடந்த மாதம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கு வேளாண் துறை அதிகாரிகளும் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் கொடுத்த நெருக்கடிதான் காரணம் என்று கூறப்பட்டது. வேளாண் துறையில் தாற்காலிக ஓட்டுநர்கள் பணி நியமனத்துக்கு, மேலிடத்தில் இருந்து கொடுக்கப்பட்ட கடும் நெருக்கடியே காரணம் என்று வேளாண் அலுவலர்கள் கூறினர். இந்நிலையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேளாண்மைத் துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்து, வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கு சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை காவல் கண்காணிப்பாளர் அன்பு தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பூவையா என்பவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர், ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி. திருவண்ணாமலையில் வசித்து வருகிறார். நேற்று இவரை சென்னையில் வைத்து விசாரணை நடத்திய போலீஸார்,. அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் சில முக்கியக் குறிப்புகளைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்தனர். ப்படுகிறது.
வேளாண் அதிகாரி தற்கொலை: அக்ரி கிருஷ்ணமூர்த்தி உதவியாளரிடம் சிபிசிஐடி விசாரணை
Popular Categories


