அஜித் – ஷாலினி தம்பதியின் ரொமாண்டிக் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தாறுமாறாக வைரலானது.
தமிழ் சினிமாவில் திரையிலும் சரி, நிஜத்திலும் சரி மீண்டும், மீண்டும் ரசிக்கத் தோன்றும் டாப் ஜோடிகளில் தல அஜித் – ஷாலினி தம்பதிக்கு எப்போது தனி இடம் உண்டு.
அஜித் ரசிகர்களைப் பொறுத்தவரை அவர் மீது எவ்வளவு அன்பும், மரியாதையும் வைத்துள்ளார்களோ அதே அளவிற்கு ஷாலினி மீதும் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர்.
சரண் இயக்கத்தில் அஜித் – ஷாலினி நடித்த அமர்களம் படத்தின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர்களும் காதலுக்கு பச்சைக்கொடி காட்ட, அமர்களம் படம் வெளியான அடுத்த ஆண்டே, 2002ல் அஜித், ஷாலினி திருமணம் செம்ம கிராண்டாக நடந்தது.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து முற்றிலும் விலகிய ஷாலினி சிறந்த குடும்பத் தலைவியாகவும், அனோஷ்கா, ஆத்விக்கிற்கு சிறந்த அம்மாவாகவும் தன்னுடைய கடமையை தொடர்ந்து வருகிறார்.
தன்னுடைய குடும்பத்தின் மீது கேமரா வெளிச்சம் படுவதில் அஜித்துக்கு விருப்பம் இல்லை என்றாலும், அவர்களுடைய குடும்ப புகைப்படம், அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாவது உண்டு.
அந்த வகையில். தற்போது அஜித் – ஷாலினி தம்பதியின் ரொமாண்டிக் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது.
அதில் கருப்பு நிற ஸ்லீவ் லெஸ் லாங் கவுன் அணிந்துள்ள ஷாலினி, தனது கணவர் அஜித்துடன் சேர்ந்து கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.
அந்த புகைப்படம் நடிகை ஷாலினி பெயரில் ட்விட்டரில் கணக்கு துவங்கப்பட்டு அதில் பகிரப்பட்டிருந்தது.
அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி பெயரில் டுவிட்டர் கணக்கு ஒன்று நேற்று தொடங்கப்பட்டுள்ளது. Shalini Ajith Kumar என்ற பெயர் கொண்ட அந்த டுவிட்டர் பக்கத்தில் அஜித், ஷாலினி ஜோடியாக எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, “டுவிட்டரில் இணைந்தது மகிழ்ச்சி. முதல் டுவிட்டே எனது அன்பு கணவருடன்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
ரசிகர்கள் பலரும் அந்தப் பக்கத்தை பின்தொடரத் துவங்கினர். யாஷிகா உள்ளிட்ட பிரபலங்களும் அவரை வரவேற்று பதிவிடத் தொடங்கினர்.
இந்த நிலையில், நடிகர் அஜித்தின் மேலாளரும், பிரபல மக்கள் தொடர்பாளருமான சுரேஷ் சந்திரா இது போலியான பக்கம் எனவும், நடிகை ஷாலினிக்கென ட்விட்டர் பக்கம் இல்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.
இது போலி கணக்காக தான் இருக்கும் என ரசிகர்கள் கணித்து வந்த நிலையில், நடிகை யாஷிகா, ஷாலினி பெயரில் உள்ள டுவிட்டை ரீ-டுவிட் செய்து, வெல்கம் மேம் என பதிவிட்டார். இதனால் அஜித் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்.
யாஷிகாவின் பதிவுக்கு பின்னர் இந்த விவகாரம் பேசுபொருள் ஆனதால், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, ஷாலினி பெயரில் இருப்பது போலி டுவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதி செய்தார்.
கிராஸ் வெரிபிகேஷன் கூட செய்யாமல், போலி டுவிட்டர் கணக்கை வரவேற்கும் விதமாக டுவிட் செய்த நடிகை யாஷிகாவை அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
சிலர், ‘போதையில் ரீ-டுவிட் செய்துவிட்டாயா’ என்றெல்லாம் கிண்டலடித்து வருகின்றனர். இதனால் யாஷிகா கடும் அப்செட்டில் உள்ளாராம்.
நடிகர் அஜித்தும், நடிகையும் ஷாலினியும் எந்த சமூக வலைதளபக்கத்திலும் இல்லை. இருவரும் பொது நிகழ்வுகளில் அரிதாகவே கலந்துகொள்கின்றனர்.
என்னை ரசிகர்கள் திரையில் பார்த்தால் போதும் என்ற கொள்கையுடன் இருக்கிறார் நடிகர் அஜித்.
கடைசியாக தல என்றோ, வேறு பட்டப்பெயர்கள் கொண்டோ அழைக்காதீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இருவரும் புகழ் வெளிச்சத்தை விரும்பாதவர்களாகவே இருந்து வருகின்றனர்.
கடைசியாக நடிகை ஷாலினி தனது சகோதரர் ரிச்சர்டு ரிஷியின் ருத்ர தாண்டவம் படத்தைக் காண திரையரங்கு வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.
There is a fake twitter account in the name of #MrsShaliniAjithkumar and we would like to clarify that she is not in twitter. Kindly ignore the same .
— Suresh Chandra (@SureshChandraa) February 2, 2022