ஆசிரியர்களை சோதிக்க.. பள்ளி கல்வித்துறை உத்தரவு!

Published:

school 2 - 2026

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து அனைத்துப் பள்ளிகளும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

கொரோனா காரணமாக ஆன்லைன் வழியில் பயின்று வந்த மாணவர்களுக்கு கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவு தேர்வு நடத்தி 1 லட்சம் ஆசிரியர்களையும் சோதித்துப் பார்க்க பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆசிரியர்களுக்கு “எண்ணும் எழுத்தும்” என்ற திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img