குடிசை வீடுகளுக்கு வந்த ரூ.4000,1லட்சம் என வந்த மின்சார பில்! கிராம மக்கள் அதிர்ச்சி!

eb - 2026

தேனி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கடமலைக்குண்டு மின்சார வாரியத்தின் சுற்றுப்புற பகுதிகளில் 50 மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இவர்கள் அனைவருக்கும் 100 மீட்டர் மின்சார கட்டணம் இலவசம் என்பதால் கடந்த ஆட்சியில் மின் கட்டணம் செலுத்தியதே இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு பின் 100 முதல் 150 வரை மின்சார கட்டணமாக செலுத்த தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் மேலும் ஒரு பேரிடியாக கடந்த மாதம் பயன்படுத்தப்பட்ட மின்சார கட்டணமாக குடிசை வீடுகளுக்கு கூட ரூபாய் 4 ஆயிரம், முதல் ஒரு லட்சம் வரை மின் கட்டணம் வந்துள்ளது.

இதை கேட்டு இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக கடமலைக்குண்டு ஆறாவது வார்டு சேர்ந்த பகுதி மக்களுக்கு பல ஆயிரங்கள் மின் கட்டணமாக கட்ட சொல்லி வலியுறுத்தியுள்ளார்கள்.

இப்பகுதியில் பெரிய வீடுகளே இல்லை. ஒரு வீட்டிற்கு சிறிய தொலைக்காட்சி மற்றும் இரண்டு மின்விசிறிகள், இரண்டு எல்.இ.டி. பல்புகள் மட்டுமே உள்ளன. இவ்வளவு மின்சார தொகை வந்ததை கண்டு பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

ஆறாவது வார்டு சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் மின் இணைப்பு எண் 058380011246-க்கு இவர் கடந்த மாதம் கட்டிய தொகை 120 மட்டுமே, ஆனால் இந்த மாதம் 6,862 ரூபாய் மின் கட்டணமாக வந்துள்ளது.

அதே போல் இதே தெருவைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவரின் மின்இணைப்பு எண் 13,350க்கு மின் கட்டணமாக ரூபாய் 27,000 ரூபாய் வந்துள்ளது.

மேலும் இதே தெருவைச் சேர்ந்த முனியம்மாள் என்பவரின் வீட்டிற்கு ரூ.9,500 ரூபாயும், ராஜாமணி என்பவரின் வீட்டிற்கு ரூ.9,000 மாரியம்மாள் என்பவரின் வீட்டிற்கு ரூ.7,000 ரூபாயும், ரஞ்சிதம்மாள் என்பவரின் வீட்டிற்கு மின்கட்டணம் 4,350 ரூபாய் இதுபோல இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் இன் மின் கட்டணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

இதே போல் தான் அக்கம் பக்கத்து கிராமத்திற்கும மின்சார கட்டண தொகை அதிகமாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்ட போது முதலில் மின் கட்டணத்தை கட்டுங்கள் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று கூறுகிறார்களாம்.

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் இடம் மின்சாரம் பில் கட்டணம் குறித்து கேட்டபோது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து யாரு மேல் தப்பு உள்ளது என்று அறிந்த பின் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories