குடிசை வீடுகளுக்கு வந்த ரூ.4000,1லட்சம் என வந்த மின்சார பில்! கிராம மக்கள் அதிர்ச்சி!

eb - 2026

தேனி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கடமலைக்குண்டு மின்சார வாரியத்தின் சுற்றுப்புற பகுதிகளில் 50 மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இவர்கள் அனைவருக்கும் 100 மீட்டர் மின்சார கட்டணம் இலவசம் என்பதால் கடந்த ஆட்சியில் மின் கட்டணம் செலுத்தியதே இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு பின் 100 முதல் 150 வரை மின்சார கட்டணமாக செலுத்த தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் மேலும் ஒரு பேரிடியாக கடந்த மாதம் பயன்படுத்தப்பட்ட மின்சார கட்டணமாக குடிசை வீடுகளுக்கு கூட ரூபாய் 4 ஆயிரம், முதல் ஒரு லட்சம் வரை மின் கட்டணம் வந்துள்ளது.

இதை கேட்டு இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக கடமலைக்குண்டு ஆறாவது வார்டு சேர்ந்த பகுதி மக்களுக்கு பல ஆயிரங்கள் மின் கட்டணமாக கட்ட சொல்லி வலியுறுத்தியுள்ளார்கள்.

இப்பகுதியில் பெரிய வீடுகளே இல்லை. ஒரு வீட்டிற்கு சிறிய தொலைக்காட்சி மற்றும் இரண்டு மின்விசிறிகள், இரண்டு எல்.இ.டி. பல்புகள் மட்டுமே உள்ளன. இவ்வளவு மின்சார தொகை வந்ததை கண்டு பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

ALSO READ:  ‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆறாவது வார்டு சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் மின் இணைப்பு எண் 058380011246-க்கு இவர் கடந்த மாதம் கட்டிய தொகை 120 மட்டுமே, ஆனால் இந்த மாதம் 6,862 ரூபாய் மின் கட்டணமாக வந்துள்ளது.

அதே போல் இதே தெருவைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவரின் மின்இணைப்பு எண் 13,350க்கு மின் கட்டணமாக ரூபாய் 27,000 ரூபாய் வந்துள்ளது.

மேலும் இதே தெருவைச் சேர்ந்த முனியம்மாள் என்பவரின் வீட்டிற்கு ரூ.9,500 ரூபாயும், ராஜாமணி என்பவரின் வீட்டிற்கு ரூ.9,000 மாரியம்மாள் என்பவரின் வீட்டிற்கு ரூ.7,000 ரூபாயும், ரஞ்சிதம்மாள் என்பவரின் வீட்டிற்கு மின்கட்டணம் 4,350 ரூபாய் இதுபோல இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் இன் மின் கட்டணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

இதே போல் தான் அக்கம் பக்கத்து கிராமத்திற்கும மின்சார கட்டண தொகை அதிகமாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்ட போது முதலில் மின் கட்டணத்தை கட்டுங்கள் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று கூறுகிறார்களாம்.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் இடம் மின்சாரம் பில் கட்டணம் குறித்து கேட்டபோது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து யாரு மேல் தப்பு உள்ளது என்று அறிந்த பின் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Entertainment News

Popular Categories