குடிசை வீடுகளுக்கு வந்த ரூ.4000,1லட்சம் என வந்த மின்சார பில்! கிராம மக்கள் அதிர்ச்சி!

eb - 2026

தேனி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கடமலைக்குண்டு மின்சார வாரியத்தின் சுற்றுப்புற பகுதிகளில் 50 மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இவர்கள் அனைவருக்கும் 100 மீட்டர் மின்சார கட்டணம் இலவசம் என்பதால் கடந்த ஆட்சியில் மின் கட்டணம் செலுத்தியதே இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு பின் 100 முதல் 150 வரை மின்சார கட்டணமாக செலுத்த தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் மேலும் ஒரு பேரிடியாக கடந்த மாதம் பயன்படுத்தப்பட்ட மின்சார கட்டணமாக குடிசை வீடுகளுக்கு கூட ரூபாய் 4 ஆயிரம், முதல் ஒரு லட்சம் வரை மின் கட்டணம் வந்துள்ளது.

இதை கேட்டு இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக கடமலைக்குண்டு ஆறாவது வார்டு சேர்ந்த பகுதி மக்களுக்கு பல ஆயிரங்கள் மின் கட்டணமாக கட்ட சொல்லி வலியுறுத்தியுள்ளார்கள்.

இப்பகுதியில் பெரிய வீடுகளே இல்லை. ஒரு வீட்டிற்கு சிறிய தொலைக்காட்சி மற்றும் இரண்டு மின்விசிறிகள், இரண்டு எல்.இ.டி. பல்புகள் மட்டுமே உள்ளன. இவ்வளவு மின்சார தொகை வந்ததை கண்டு பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

ஆறாவது வார்டு சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் மின் இணைப்பு எண் 058380011246-க்கு இவர் கடந்த மாதம் கட்டிய தொகை 120 மட்டுமே, ஆனால் இந்த மாதம் 6,862 ரூபாய் மின் கட்டணமாக வந்துள்ளது.

அதே போல் இதே தெருவைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவரின் மின்இணைப்பு எண் 13,350க்கு மின் கட்டணமாக ரூபாய் 27,000 ரூபாய் வந்துள்ளது.

மேலும் இதே தெருவைச் சேர்ந்த முனியம்மாள் என்பவரின் வீட்டிற்கு ரூ.9,500 ரூபாயும், ராஜாமணி என்பவரின் வீட்டிற்கு ரூ.9,000 மாரியம்மாள் என்பவரின் வீட்டிற்கு ரூ.7,000 ரூபாயும், ரஞ்சிதம்மாள் என்பவரின் வீட்டிற்கு மின்கட்டணம் 4,350 ரூபாய் இதுபோல இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் இன் மின் கட்டணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

இதே போல் தான் அக்கம் பக்கத்து கிராமத்திற்கும மின்சார கட்டண தொகை அதிகமாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்ட போது முதலில் மின் கட்டணத்தை கட்டுங்கள் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று கூறுகிறார்களாம்.

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் இடம் மின்சாரம் பில் கட்டணம் குறித்து கேட்டபோது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து யாரு மேல் தப்பு உள்ளது என்று அறிந்த பின் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories