குடிசை வீடுகளுக்கு வந்த ரூ.4000,1லட்சம் என வந்த மின்சார பில்! கிராம மக்கள் அதிர்ச்சி!

eb - 2026

தேனி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கடமலைக்குண்டு மின்சார வாரியத்தின் சுற்றுப்புற பகுதிகளில் 50 மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இவர்கள் அனைவருக்கும் 100 மீட்டர் மின்சார கட்டணம் இலவசம் என்பதால் கடந்த ஆட்சியில் மின் கட்டணம் செலுத்தியதே இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு பின் 100 முதல் 150 வரை மின்சார கட்டணமாக செலுத்த தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் மேலும் ஒரு பேரிடியாக கடந்த மாதம் பயன்படுத்தப்பட்ட மின்சார கட்டணமாக குடிசை வீடுகளுக்கு கூட ரூபாய் 4 ஆயிரம், முதல் ஒரு லட்சம் வரை மின் கட்டணம் வந்துள்ளது.

இதை கேட்டு இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக கடமலைக்குண்டு ஆறாவது வார்டு சேர்ந்த பகுதி மக்களுக்கு பல ஆயிரங்கள் மின் கட்டணமாக கட்ட சொல்லி வலியுறுத்தியுள்ளார்கள்.

இப்பகுதியில் பெரிய வீடுகளே இல்லை. ஒரு வீட்டிற்கு சிறிய தொலைக்காட்சி மற்றும் இரண்டு மின்விசிறிகள், இரண்டு எல்.இ.டி. பல்புகள் மட்டுமே உள்ளன. இவ்வளவு மின்சார தொகை வந்ததை கண்டு பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

ஆறாவது வார்டு சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் மின் இணைப்பு எண் 058380011246-க்கு இவர் கடந்த மாதம் கட்டிய தொகை 120 மட்டுமே, ஆனால் இந்த மாதம் 6,862 ரூபாய் மின் கட்டணமாக வந்துள்ளது.

அதே போல் இதே தெருவைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவரின் மின்இணைப்பு எண் 13,350க்கு மின் கட்டணமாக ரூபாய் 27,000 ரூபாய் வந்துள்ளது.

மேலும் இதே தெருவைச் சேர்ந்த முனியம்மாள் என்பவரின் வீட்டிற்கு ரூ.9,500 ரூபாயும், ராஜாமணி என்பவரின் வீட்டிற்கு ரூ.9,000 மாரியம்மாள் என்பவரின் வீட்டிற்கு ரூ.7,000 ரூபாயும், ரஞ்சிதம்மாள் என்பவரின் வீட்டிற்கு மின்கட்டணம் 4,350 ரூபாய் இதுபோல இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் இன் மின் கட்டணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

இதே போல் தான் அக்கம் பக்கத்து கிராமத்திற்கும மின்சார கட்டண தொகை அதிகமாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்ட போது முதலில் மின் கட்டணத்தை கட்டுங்கள் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று கூறுகிறார்களாம்.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் இடம் மின்சாரம் பில் கட்டணம் குறித்து கேட்டபோது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து யாரு மேல் தப்பு உள்ளது என்று அறிந்த பின் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories