சென்னை:
வாய்ப்பளித்தால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று நடிகையாக இருந்து அரசியல்வாதி ஆனவரும், காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாய்ப்பு கொடுத்தால் தமிழக சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடுவேன். கூட்டணி தொடர்பாக நல்ல முடிவை விஜயகாந்த் எடுப்பார். ஐந்து ஆண்டுகளில் செய்யாததை தேர்தலுக்காக தமிழக அரசு செய்து வருகிறது. திசை திருப்பவே கார்த்தி சிதம்பரத்தின் விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.


