பிரமாணப் பத்திரத்தை யார் தயாரித்திருப்பர் என்பது உங்களுக்கே தெரியும்: உள்துறை முன்னாள் துணைச் செயலர் திடுக் தகவல்

புது தில்லி:

இஷ்ரத் ஜகான் என்கவுண்டர் விவகாரத்தில், இரண்டாவதாகத் தயாரிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தை யார் தயாரித்திருப்பர் என்பது உங்களுக்கே தெரியும் என்று, உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் துணை செயலாளர் ஆர்.வி.எஸ்.மணி திடுக்கிடும் தகவலைத் தெரிவித்தார்.

குஜராத்தில் போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று கூறப்படும் மும்பையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான், ஒரு ‘தற்கொலைப்படை பயங்கரவாதி’ என்று அமெரிக்காவில் இருந்தபடி மும்பை நீதிமன்றத்தில் விடியோ கான்பிரன்ஸிங்கில் வாக்குமூலம் அளித்த டேவிட் ஹெட்லி கூறி இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்து, இஷ்ரத் ஜகான் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்தரத்தை, அப்போதைய காங்கிரஸ் அரசு திருத்தி, இரண்டாவது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ததாக முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.பிள்ளை கடந்த வாரம் கூறியிருந்தார். இது, அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் துணைச் செயலாளர் ஆர்.வி.எஸ்.மணி நேற்று அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட திடுக்கிடும் தகவலில் இஷ்ரத் ஜகான் வழக்கில், திருத்தப்பட்ட, இரண்டாவது மனுவை தாக்கல் செய்யுமாறு அப்போதைய காங்கிரஸ் அரசு எனக்கு உத்தரவிட்டது. அந்த நிர்ப்பந்தத்தால், அந்த மனுவில் நான் கையெழுத்திட்டு தாக்கல் செய்தேன். அந்த மனுவை நானும் தயாரிக்கவில்லை, அப்போதைய உள்துறை செயலாளரும் தயாரிக்கவில்லை. பிறகு யார் தயாரித்திருப்பார் என்பது உங்களுக்கே தெரியும். இதில் அரசியல் தலையீடு இருந்தது என்று நம்ப இடமிருக்கிறது என்று கூறியுள்ளார்.

இத்தகைய பரபரப்பான திருப்பங்களால், போலி என்கவுண்டர் என்று போலியாக ஒரு நிகழ்வை உருவாக்கி செய்தியாக்கிய விவகாரத்தில், இப்போது பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

இருப்பினும், இஷ்ரத் ஜஹான் வழக்கில் பிரமாணப் பத்திரத்தைத் திருத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த சிதம்பரம், முதல் பிரமாணப் பத்திரத்தில் தவறு இருப்பதாக தனக்குத் தெரியவந்த பிறகு, உள்துறைச் செயலர், உளவுத்துறையின் இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகே இரண்டாவது பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாகவும், அப்போது உள்துறைச் செயலராக இருந்த ஜி.கே.பிள்ளை தற்போது இந்த விஷயத்தில் தன்னை விலக்கிக் கொள்வது அதிருப்தி அளிப்பதாகவும் சிதம்பரம் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories