காந்தி நினைவு தினம்: 2 நிமிடம் போக்குவரத்து நிறுத்தம்!

Published:

சென்னை:
1948 ஜன.30ம் தேதி மறைந்தார் மகாத்மா காந்தி. இன்று காந்தி நினைவு தினம் என்பதால் சென்னையில் இன்று 2 நிமிடங்கள் போக்குவரத்து நிறுத்தப் படுகிறது.

காந்தி நினைவு தினம், தியாகிகள் தினமாக கடைப் பிடிக்கப் படுகிறது. இந்த தினத்தை ஒட்டி, சென்னையில் இன்று இரு நிமிடம் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ம் தேதி தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இவ்வாண்டு தியாகிகள் தினத்தையொட்டி, ஜனவரி 30ம் தேதி (இன்று) காலை 11 மணி முதல் 11.02 வரை இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது. அந்த நேரத்தில் சென்னை பெருநகரில் போக்குவரத்து இரு நிமிடங்கள் நிறுத்தப்படும். இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

  • இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img