பழிவாங்கும் ‘திசா’வின் ஆவி! குழந்தை பிறந்து மூன்றே நாள்… சென்னகேசவலு தந்தை மரணம்!

Published:

chennakesavalu father - 2026

திசா வன்முறை கொலைவழக்கில் என்கவுண்டர் செய்யப்பட்ட சென்னை கேசவலு வீட்டில் சோகம். சென்னகேசவுலுவின் தந்தை மரணம் அடைந்தார்.

சென்ற ஆண்டு டிசம்பர் 26 சாலை விபத்தில் சென்னகேசவுலுவின் தந்தை காயமடைந்தார். பைக்கில் செல்லும்போது இன்னோவா வாகனம் இடித்தது.

நாடெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்திய திசா வன்முறை கொலை வழக்கு குற்றவாளியான என்கவுண்டரில் கொல்லப்பட்டவரின் வீட்டில் சோகம். தந்தை திங்களன்று காலமானார்.

சென்ற ஆண்டு டிசம்பர் 26 சாலை விபத்தில் காயமடைந்தார். பைக்கில் செல்லும்போது இன்னோவா வாகனம் அவரை இடித்தது. தீவிர காயங்களோடு குர்மய்யா ஹைதராபாத்தில் சில நாட்கள் சிகிச்சை பெற்றார். சில நாட்களுக்கு முன்பு குடும்ப உறுப்பினர்கள் அவரை சொந்த கிராமம் குடிகுண்ட்லக்கு அழைத்துச் சென்றனர்.

இது இப்படி இருக்க திங்கள் அன்று மதியம் வீட்டிலேயே குர்மையா மரணமடைந்தார். மூன்று நாட்களுக்கு முன்பு சென்னகேசவுலுவின் மனைவி ரேணுகா விற்கு பெண் குழந்தை பிறந்தது. மார்ச் 6 ஆம் தேதி மகபூப்நகர் மருத்துவமனையில் அவருக்கு பிரசவம் நடந்தது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!
hyderabad rape case accusts - 2026

வீட்டில் குழந்தை பிறந்து மூன்று நாட்களுக்குள் சென்னகேசவுலுவின் தந்தை குர்மையா மரணமடைந்த விஷயம் அங்கு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னகேசவலு குற்றவாளியாகி என்கவுண்டரில் இறந்தது, அவருடைய தந்தையும் சாலை விபத்தில் காயமடைந்து இறந்தது… என்று அவர்கள் குடும்பத்தில் சோகத்தின் நிழல் சுற்றிச்சுற்றி வருகிறது. ரேணுகாவின் கணவன் சென்ன கேசவலு திசா வன்முறை கொலை வழக்கில் 2ம் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டார்.

அவருடைய சொந்த கிராமம் நாராயண பேட்டை மாவட்டம் முக்தல் மண்டலம் குடிகுண்ட்ல கிராமம். திசா சம்பவத்தின் போதே ரேணுகா கர்ப்பவதியாக இருந்தார்.

disa lady - 2026

இதனிடையே, ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து சிறிதும் கருணையற்ற வகையில் நான்கு பேர் கொடூரமாக அந்தப் பெண்ணை எரித்துக் கொன்றதற்கு பழிவாங்கும் வகையில், அதே இடத்தில் அதே பாலத்தின் அடியில், அந்த நான்கு பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

இது திசாவின் அடங்காத ஆவியின் பழிவாங்கல் என்று தெலுங்கு மக்கள் பரவலாக பேசிக் கொண்டனர். இப்போது அந்த நால்வரில் ஒருவனான சென்னகேசவலுவின் தந்தைக்கு ஏற்பட்ட மரணமும் அதன் காரணத்தால் ஆதரவற்ற நிலைக்கு குடும்பம் தள்ளப்பட்டதும், திசா ஆவியின் பழிவாங்கல் விளைவே என்று சிலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்தப் பேச்சு மற்ற குற்றவாளிகளின் குடும்பத்தாரிடையே திகில் கிளப்பியுள்ளது.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img