தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடி வழியாக கேரளாவிற்கு லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
செங்கோட்டை அருகே புளியரை சோதனைச் சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
அவ்வழியாக எம்-சாண்ட், பி-சாண்ட் போன்ற மணல்களை கொண்டு செல்ல அனுமதியில்லை. அங்கு அதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறிய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், புளியரை சோதனைச் சாவடி வழியாக கேரளாவிற்கு லாரிகளில் எம்-சாண்ட் மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து கனிம வளங்கள் மற்ற மாநிலங்களுக்கு கடத்தப்படுவதால் விலையேற்றம் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படும் எனவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.