செங்கோட்டை புளியரை வழியாக கேரளாவிற்கு மணல் கடத்தல்..!

Published:

puliyarai - 2026

தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடி வழியாக கேரளாவிற்கு லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

செங்கோட்டை அருகே புளியரை சோதனைச் சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

அவ்வழியாக எம்-சாண்ட், பி-சாண்ட் போன்ற மணல்களை கொண்டு செல்ல அனுமதியில்லை. அங்கு அதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறிய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், புளியரை சோதனைச் சாவடி வழியாக கேரளாவிற்கு லாரிகளில் எம்-சாண்ட் மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து கனிம வளங்கள் மற்ற மாநிலங்களுக்கு கடத்தப்படுவதால் விலையேற்றம் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படும் எனவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img