அடுக்குமாடியில் நுனியில் தொங்கியபடி உடற்பயிற்சி செய்த நபர்!

viral - 2026

தில்லிக்கு அருகேயுள்ள ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது ஃபரீதாபாத் நகரம் மீண்டும் ஒரு வைரல் வீடியோவால சோசியல் மீடியாவில் அடிபட ஆரம்பித்துள்ளது.

கடந்த வாரம் 8வது தளத்தில் விழுந்துவிட்ட ஆடையை எடுப்பதற்காக 9வது தளத்தில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் இருந்து தாய் ஒருவர் தனது மகனை பெட்ஷீட்டால் கட்டி கீழே இருக்கும் வீடியோ வெளியே கடும் விமர்சனங்களை குவித்தது.

பெற்ற மகனின் உயிரை துணிக்காக பணயம் வைத்த தாயை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கினர். இதுகுறித்து ஊடகங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில், “என்னை மன்னித்துவிடுங்கள், இச்சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டது எனக்கு தெரியாது” என சிறுவனின் தாய் மன்னிப்பு கோரியிருந்தார்.

அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்கு அடுத்த வீடியோ வெளியாகி அனைவருக்கும் மிகப்பெரிய ஷாக் கொடுத்துள்ளது.

மீண்டும் அதே ஃபரீதாபாத் நகரில் அமைந்துள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பால்கனி கம்பிகளை பிடித்துக்கொண்டு அடையாளம் தெரியாத நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் நபர் படமாக்கியுள்ளார். அந்த காட்சியை பார்க்கும் பெண் ஒருவர் ஆச்சர்யத்துடன் “அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறாரா?” என கேட்பதும் பதிவாகியுள்ளது.

பால்கனியின் கம்பிகளை பிடித்துக்கொண்டு Push Up செய்யும் அந்த நபர், உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு மீண்டும் மேலே வரும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன.

கரணம் தப்பினால் மரணம் என்பார்கள் இப்படி உயிரை பணயம் வைத்து உடற்பயிற்சி செய்து வரும் நபரை சோசியல் மீடியாவில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

உடலினை உறுதி செய்யவும், ஆரோக்கியமாக வாழவும் தான் உடற்பயிற்சி தேவையே தவிர, இப்படி உயிரைப் பணயம் வைத்து தேவையில்லாத சாகசங்களை செய்வதற்கு கிடையாது என சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கி வருகின்றனர்.

கொஞ்சமும் பொறுப்பில்லாமல் இதுபோன்ற நபர்கள் செய்யும் செயல்கள் தான் குழந்தைகளை தவறாக வழிநடத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories