அடுக்குமாடியில் நுனியில் தொங்கியபடி உடற்பயிற்சி செய்த நபர்!

viral - 2026

தில்லிக்கு அருகேயுள்ள ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது ஃபரீதாபாத் நகரம் மீண்டும் ஒரு வைரல் வீடியோவால சோசியல் மீடியாவில் அடிபட ஆரம்பித்துள்ளது.

கடந்த வாரம் 8வது தளத்தில் விழுந்துவிட்ட ஆடையை எடுப்பதற்காக 9வது தளத்தில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் இருந்து தாய் ஒருவர் தனது மகனை பெட்ஷீட்டால் கட்டி கீழே இருக்கும் வீடியோ வெளியே கடும் விமர்சனங்களை குவித்தது.

பெற்ற மகனின் உயிரை துணிக்காக பணயம் வைத்த தாயை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கினர். இதுகுறித்து ஊடகங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில், “என்னை மன்னித்துவிடுங்கள், இச்சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டது எனக்கு தெரியாது” என சிறுவனின் தாய் மன்னிப்பு கோரியிருந்தார்.

அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்கு அடுத்த வீடியோ வெளியாகி அனைவருக்கும் மிகப்பெரிய ஷாக் கொடுத்துள்ளது.

மீண்டும் அதே ஃபரீதாபாத் நகரில் அமைந்துள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பால்கனி கம்பிகளை பிடித்துக்கொண்டு அடையாளம் தெரியாத நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

அந்த வீடியோவை எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் நபர் படமாக்கியுள்ளார். அந்த காட்சியை பார்க்கும் பெண் ஒருவர் ஆச்சர்யத்துடன் “அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறாரா?” என கேட்பதும் பதிவாகியுள்ளது.

பால்கனியின் கம்பிகளை பிடித்துக்கொண்டு Push Up செய்யும் அந்த நபர், உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு மீண்டும் மேலே வரும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன.

கரணம் தப்பினால் மரணம் என்பார்கள் இப்படி உயிரை பணயம் வைத்து உடற்பயிற்சி செய்து வரும் நபரை சோசியல் மீடியாவில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

உடலினை உறுதி செய்யவும், ஆரோக்கியமாக வாழவும் தான் உடற்பயிற்சி தேவையே தவிர, இப்படி உயிரைப் பணயம் வைத்து தேவையில்லாத சாகசங்களை செய்வதற்கு கிடையாது என சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கி வருகின்றனர்.

கொஞ்சமும் பொறுப்பில்லாமல் இதுபோன்ற நபர்கள் செய்யும் செயல்கள் தான் குழந்தைகளை தவறாக வழிநடத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

Entertainment News

Popular Categories