ரகசியமான ஆவணங்கள், தகவல்களை இணையத்தில் பகிர.. எச்சரிக்கும் மத்திய அரசு!

broadcast - 2026

இன்றைய நவீன காலத்தில் பலரும் சாதாரண போட்டோ முதல் முக்கியமான ஆவணங்கள் வரை அனைத்தையும் இணையத்தின் மூலமாகவே பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அரசு மற்றும் அலுவலகம் சம்மந்தப்பட்ட ரகசியமான ஆவணங்கள் அல்லது தகவல்களை இணையத்தில் பகிர்வது தொடர்பாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அனைத்து அதிகாரிகளுக்கும் ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளது.

அதன்படி கமர்ஷியல் AES 256-பிட் என்க்ரிப்டட் செய்யப்பட்ட நெட்வொர்க்குகள் மூலம் முக்கியமான ஆவணங்களை இணையத்தில் பகிருமாறு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கோரியுள்ளது.

இத்தகைய ரகசிய ஆவணங்களைப் பகிர்வதற்காக பலரும் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற மெசேஜிங் செயலிகளையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் இவை துறைசார் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மற்றும் தேசிய பாதுகாப்புக் கொள்கை அறிவுறுத்தி இருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவதாக அமைகிறது.

மேலும் ரகசியமான தகவல்களை அனுப்ப அரசாங்கத்தின் மின்னஞ்சல் (NIC) அல்லது அரசாங்கத்தின் மெசேஜிங் செயலிகளை பயன்படுத்தி அனுப்பலாம் என்று பரிந்துரைக்கிறது.

ALSO READ:  5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

ஈ-அலுவலக அமைப்பில் முறையான ஃபயர்வால்கள் மற்றும் ஐபி முகவரிகளை வரிசைப்படுத்த வேண்டும்.

மிக முக்கியமான தகவல்கள் ஈ-அலுவலக அமைப்பில் லைன் மூடிய நெட்வொர்க் மற்றும் SAG தர என்க்ரிப்ட் செயல்முறையின் மூலம் பகிரப்படும். வீடியோக்களாக அனுப்ப அரசங்கத்தின் அனுமதியோடு இயங்கும் சிடிஏசி, சிடிஓடி மற்றும் என்ஐசி போன்றவற்றை பயன்படுத்தலாம்.

இதன் ஐடி மற்றும் பாஸ்வேர்டை அங்கீகரிக்கப்பட்ட நபர்களுடன் மட்டுமே பகிர்ந்துகொள்ள வேண்டும்.

டிஜிட்டல் அசிஸ்டன்ட் சாதனங்களான அமேசானின் எக்கோ, ஆப்பிளின் ஹோம் பாட், கூகுள் ஹோம் போன்றவற்றை அலுவலகத்தில் வைத்துக்கொள்ள முடியாது.

அலெக்சா மற்றும் சிரி போன்றவற்றை ஊழியர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள், வாட்ச்கள் போன்றவற்றில் ஆஃப் செய்து வைத்திருக்க வேண்டும்.

மேலும் முக்கியமான விஷயங்கள் குறித்து அலுவலகத்தில் கலந்தாலோசிக்கும்போது ஊழியர்கள் ஸ்மார்ட்போன்களை ஆலோசனை நடைபெறும் அறைக்கு வெளியே விட்டுவிட்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories