புதிய கவுன்சிலர்கள் மார்ச்.2இல் பதவியேற்பு..

நகர்ப்புற உள்ளாட்சி‌ தேர்தலில்
வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் மார் 2ல் பதவி ஏற்கிறார்கள். இவர்களுக்கான பதவி ஏற்பு விழா அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மாநகராட்சி வார்டுகளில் வெற்றி பெற்ற 1,369 உறுப்பினர்களுக்கு அந்தந்த மாநகராட்சி கமி‌ஷனர்கள் பதவி பிரமாணம் செய்து வைப்பார்கள். இதற்கான பதவி ஏற்பு விழா மார்ச் 2காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

வார்டு வாரியாக வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள் மாநகராட்சி கமி‌ஷனர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்து பதவி ஏற்றுக் கொள்கிறார்கள்.

இதே போல நகராட்சிகளில் வெற்றி பெற்ற 3,824 உறுப்பினர்களுக்கு அந்தந்த நகராட்சி கமி‌ஷனர்கள் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்கள். பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற 7,408 உறுப்பினர்கள் செயல் அலுவலர் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொள்கிறார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொள்வதைத் தொடர்ந்து மேயர், துணை மேயர்கள் தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் மார்ச் 4-ந்தேதி நடைபெறுகிறது.

புதிய உறுப்பினர்கள் மேயர் தலைவர் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக செய்து வருகின்றன.

மேயர், துணை மேயர் இருக்கைகள், உறுப்பினர்கள் இருக்கைகள், அவர்களின் அறைகள் போன்றவை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. புதுப்பொலிவுடன் உள்ளாட்சி அலுவலகங்கள் தயார் படுத்தப்பட்டுள்ளன.

வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டதும் அடுத்த கட்டமாக மேயர், துணை மேயர்கள் தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ல் நடைபெறுகிறது.

21 மேயர்கள், துணை மேயர்கள், 138 நகராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், 489 பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் என மொத்தம் 1,298 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் மேயர், துணை மேயர்களை தேர்வு செய்வார்கள். அதன் பின்னர் அவர்கள் பதவி ஏற்றுக்கொள்வார்கள்.

தமிழகத்திலேயே 200 உறுப்பினர்களை கொண்ட மாநகராட்சியாக சென்னை உள்ளது. 200 உறுப்பினர்கள் பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாமன்றம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

15 மண்டல தலைவர்கள் மற்றும் நிலைக்குழு உறுப்பினர்களுக்கு அறைகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.

இந்த உள்ளாட்சியில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதால் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும் 50 சதவீத பெண்கள் இடம் பெறுகிறார்கள்.
புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டுக்கு நாளை மறுதேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories