December 6, 2025, 7:19 AM
23.8 C
Chennai

கல்லூரியில் ஓரு கோடி மோசடி நெல்லை பேராயர் மீது மோசடி புகார்

திருநெல்வேலி மாவட்டம்ஆலங்குளம் அருகே நல்லூர் கல்லூரியில் 91 லட்சம் மோசடி செய்ததாக நெல்லை பேராயர் உட்பட 5 பேர் மீது புகார்

ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் கல்லூரியில் 91 லட்சம் பணம் மோசடி செய்யபட்டதாக ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது. ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் சி எஸ் ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் 91 லட்சம் மோசடி செய்யபட்டதாக நெல்லை திருமண்டல பேராயர் உட்பட 5 பேர் மீது ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது. நெல்லை திருமண்டலத்திற்கு சொந்தமான சி எஸ் ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி சுயநிதி கல்லூரியாக கடந்த 21 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஆலங்குளம்,சுரண்டை,பாவூர்சத்திரம் உட்பட சுற்றுபுற கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்லூரியில் மானவர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை ஆலங்குளத்தில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டல் வங்கியில் கணக்குகள் தொடங்கபட்டு பணம் செலுத்தி வந்துள்ளனர். 7-6-17 வரை கல்லூரி முதல்வராக ஜோயல் என்பவரும், 31-5-2017 வரை தாளாளர் மற்றும் செயலாளராக நெல்லை பேராயர் கிறிஸ்துதாஸும் இருந்துள்ளனர். நெல்லை திருமண்டல தேர்தல் நீதிமன்றம் மூலம் நடத்தபட்டு புதிய நிர்வாகிகள் பொருபேற்று நல்லூர் கல்லூரி புதிய தாளாளர் மற்றும் செயலராக வக்கீல் நெல்சன்,முதல்வராக பீட்டர் பேரின்பராஜா ஆகியோர் நியமிக்கபட்டனர். இந்நிலையில் கல்லூரி தாளாளர் நெல்சன் ஆலங்குளம் காவல் நிலையத்தில் நெல்லை பேராயர் கிறிஸ்துதாஸ் மற்றும் முதல்வர் ஜோயல் உட்பட 5 பேர் கல்லூரி பணம் 91,90,544 ரூபாயை மோசடி செய்துள்ளனர் எனவும் மேற்படி பணத்தை சட்டப்படி பெற்று தரவேண்டும் என புகார் அளித்தார். அவர் அளித்துள்ள புகார் மனுவில் கல்லூரியின் முன்னாள் தாளாளர் பேராயர் கிறிஸ்துதாஸ் மற்றும் முன்னாள் முதல்வர் ஜோயல் ஆகியோர் கல்லூரி மானவர்களிடம் இருந்து பெறப்பட்ட கல்லூரிக்கு சொந்தமான பணம் 91,90,544 ரூபாய்யை அவர்களுக்கு வேண்டியவர்களான கல்லூரிக்கு சம்பந்தமிலாத குருவானவர் காந்தையா நல்லபாண்டி மற்றும் ஜெயக்குமார் ஜெயராஜ் ஆகியோர் பெயருக்கு மாற்றி மோசடி செய்துள்ளனர்.  தமிழ்நாடு மெர்கன்டல் வங்கியில் உள்ள சி எஸ் ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியின் 6 வகையான கணக்குகளை நூதன முறையில் இந்தியன் வங்கி ஆலங்குளம் கிளையில் சி எஸ் ஐ டி ஏ என்ற பெயரில் மாற்றியுள்ளனர். இது தற்போதைய நிர்வாக ஒப்புதலின்றி கணக்கு ஆரம்பிக்கபட்டு பணத்தை பரிமாற்றம் செய்துள்ளனர். இதற்கு சென்னை சி எஸ் ஐ பிரதம பேராயர் தாமஸ் கே ஓமன் உடந்தையாக உள்ளார். தற்போது கல்லூரி பணத்தை அவர்கள் மோசடியாக எடுத்துள்ளதால் நிர்வாகம் செயல்படாத நிலை உள்ளது. எனவே பணத்தை மோசடி செய்த 5 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்று தர  வேண்டும் என கூறபட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories