பால், தயிர் விலை உயர்வு! மக்கள் அதிர்ச்சி!

Published:

milk - 2026

தமிழகத்தில் 4 தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பால் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தற்போது ஜெர்சி, டோட்லா, ஹெரிடேஜ், திருமலா ஆகிய நிறுவனங்களின் பால் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

பால் மற்றும் தயிரின் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன. இதன் காரணமாக திருமலா நிறுவனத்தின் முழு கிரீம் பால் ரூ.66 வரை விற்பனை செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

அதேபோல் ஜெர்சி, டோட்லா, ஹெரிடேஜ் ஆகிய நிறுவனங்களின் பால் விலை உயர்வும் பிப்.24ஆம் தேதி முதலே அமலுக்கு வந்துள்ளதாகவும், மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால்தான் பால் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பால் முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆவின் நிறுவனத்தின் முழு கிரீம் பால் 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

Related articles

Recent articles

spot_img