இராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு வைரக் கற்கள், கஞ்சா ஆயில் கடத்த முயன்ற யூசுப் சுலைமான், செபீக் கைது!

Cannabis oil - 2026

ராமநாதபுரம் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள், தங்கம், வைரம் ஆகியவை கடத்தப்படுவது தடுத்து நிறுத்த எடுத்த நடவடிக்கையில் வைரகற்களும், கஞ்சா ஆய்விலும் பறிமுதல்.

ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி கார்த்திக் தலைமையிலான தனிப்படை போலீஸார் ராமநாதபுரம் முழுவதும் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி பசும்பொன் நகர் ரயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தடுத்து நிறுத்த முயன்றபோது, அவர் நிற்காமல் சென்றுள்ளார்.

அவரை போலீஸார் விரட்டிச் சென்று பிடித்து அவர் வைத்திருந்த பாலிதீன் கவரைப் பிரித்து சோதனை செய்தனர். அதில் பட்டை தீட்டப்படாத வைரக் கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் கீழக்கரையைச் சேர்ந்த யூசுப் சுலைமான் என்பதும், ராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு வைரக் கற்கள் கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 2 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Yusuf Solomon - 2026

இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் இந்த வைர கற்களை கீழக்கரையைச் சேர்ந்த ஒருவர் கொடுத்து அனுப்பியதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் வைர வியாபாரிகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் பழைய பேருந்து நிலையம் அருகே நடத்திய வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடிக்க முயன்றபோது ஒருவர் வாகனத்தில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

அதனைத் தொடர்ந்து மற்றொரு நபரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில் இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கேரளா மாநிலம் நெடுமங்கலம் பண்ணவயல்வீடு பகுதியைச் சேர்ந்த செபீக் என்பதும்,

Sepik - 2026

இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா ஆயிலைக் கொண்டு வந்ததும் தெரியவந்தது. தப்பி ஓடிய திருவனந்தபுரத்தைச் சேர்ந்த முகம்மது ஜாவீத் ரகுமானை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் எஸ்.பி. கார்த்திக்கிடம் கேட்டபோது, “டிஜிபி அறிவுறுத்தலின் பெயரில் ராமநாதபுரம் முழுவதும் கடத்தல் சம்பவங்களை தடுக்க வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டிருக்கின்றன.

அதன்படி நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டாம் ரக வைர கற்களும், மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக `ஆஷிஷ்’ எனப்படும் கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயுலும் கடத்திச் செல்ல முயன்றதை தடுத்து பறிமுதல் செய்துள்ளோம்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories