மங்களூரு, ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூரில் இருந்து, கர்நாடகா மாநிலம் மங்களூருக்கு தினமும் இரவு 11:35க்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில், மார்ச் 2ம் தேதியில் இருந்து இரவு 11:15க்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 7:15 மணிக்கு, மங்களூரு சென்ட்ரல் நிலையம் சென்றடையும்.
எழும்பூரில் இருந்து திருச்சிக்கு, தினமும் இரவு 11:15க்கு ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில், மார்ச் 2ம் தேதியில் இருந்து இரவு 11:35க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 4:55 மணிக்கு திருச்சி சென்றடையும்.
கோவை வழியாக செல்லும் சென்னை எக்மோர் – மங்களூர் சென்ட்ரல் (16159) தினசரி விரைவு ரயிலின் இயக்க நேரம் மாற்றப்பட்டுள்ளது.
திருச்சி, கரூர், திருப்பூர் வழியாக வடகோவையை மறுநாள் காலை, 10:14க்கு வந்தடையும் ரயில், 9:44க்கும், கோவை ஸ்டேஷனை, 10:52க்கு பதிலாக, 9:55க்கும் வந்தடையும்.
அன்றைய இரவு, 10:15க்கு மங்களூர் அடைய வேண்டிய இந்த ரயில், 7:15க்கு சென்றடையும் வகையில் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிக்கையில் தெரிவித்துள்ளது.