திருப்பூர் நகைக்கடையில் கொள்ளையடித்த‌ நால்வர் கைது..

திருப்பூரில் ஜெயக்குமார் என்பவரது நகை கடையில் கடந்த 3ம் தேதி 375 சவரன் நகைகள் 9கிலோ வெள்ளி ரூ25லட்சம் கொள்ளை போனது. கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில்
போலீசார் 3தனிபடை அமைத்து விசாரணை நடத்தி வெப்கேமரா மூலம் கொள்ளையர்களை அடையாளம் கண்டனர்.இவர்கள் திருப்பூரில் இருந்து ரயில் மூலம் மஹாராஷ்டிரா சென்றபோது ரயில்வே போலிஸ் உதவியுடன் வடமாநிலத்தவர் 4 பேரை மராட்டிய மாநிலத்தில் இன்று கைது செய்தனர்.
மகாராஷ்டிரா ரெயில்வே போலீசாரின் உதவியை நாடிய தனிப்படை போலீசார் கொள்ளை கும்பலை சேர்ந்த 4 பேரின் உருவப்படங்களை அவர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

202203061008292393 Tamil News Tamil News Northern robbers four arrested for gold robbery MEDVPF - 2026

கொள்ளையர்கள் 4 பேரும் பயணித்த ரெயில் நாக்பூர் பலர்சா என்ற பகுதியில் செல்லும்போது ரெயில்வே போலீசார் ரெயிலில் ஏறி தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயிலில் இருந்த 4 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதுகுறித்து திருப்பூர் தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் நாக்பூருக்கு விரைந்தனர். அவர்களிடம் 4 பேரையும் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில் 4 பேரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த மஹ்தாப் ஆலம், பத்ருல் (27), திலாகாஸ்(20), முகமது சுப்ஹான் (30) என்பது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பைகளில் சோதனை செய்தபோது 3 கிலோ தங்கம், 28 கிலோ வெள்ளி நகைகள், ரூ.14 லட்சம் பணம் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.2 கோடியே 10 லட்சம் இருக்கும்.

பின்னர் 4 பேரையும் நாக்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய தனிப்படை போலீசார், அவர்களிடம் கொள்ளை குறித்து விசாரணை நடத்துவதற்காக திருப்பூருக்கு அழைத்து வருகின்றனர்.நகை கொள்ளை ச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதால் திருப்பூர் வியாபாரிகள் நிம்மதியடைந் துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories