கேரளாவில் கன்னூர் மாவட்டத்தில் வாட்ஸ் அப் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அத்துடன் பெங்களூருவில் இருந்து கன்னூருக்கு சொகுசுபேருந்தில் கொரியர் மூலமும் போதைப்பொருள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது.
குறிப்பிட்ட கொரியர் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தியதில் பார்சலில் வந்த போதைப்பொருளை வாங்க வந்த தம்பதிகள் கையும் களவுமாக சிக்கிக் கொண்டனர்.
அவர்கள் முகபிலங்காடு பகுதியில் வசித்து வரும் அப்சல் மற்றும் அவரது மனைவி பல்கிஸ். இந்த தம்பதியினர் பதுக்கிவைத்திருந்த ரூபாய் 1.5கோடி மதிப்புள்ள போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.
கேரளாவில் ஒரே சமயத்தில் பிடிபட்ட அதிகபட்ட மதிப்புடைய போதைப்பொருள் இதுவே. இவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதன்படி இருவரும் வாட்ஸ் அப் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளனர். இதற்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குரூப்பில் ஆர்டர்கள் பெற்று விற்பனை செய்துவந்துள்ளனர்.
இவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.