லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து: நேர்மையான கிராம நிர்வாக பெண் அலுவலர்!

kavitha 1 - 2026

தேனி மாவட்டம்உத்தமபாளையம் கோகிலாபுரத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரான கவிதா, தனது முதல் பணி நாள் முதல் இன்று வரை கையூட்டு வாங்காமல் பணியாற்றி வருவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அரசு அலுவலர் தனது பணியினை செய்யவோ அல்லது செய்யாமல் இருப்பதற்கு, பிற நபர்களிடம் இருந்து பணம் வாங்குவது லஞ்சமாக பார்க்கப்படுகிறது.

இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி கடும் குற்றம் ஆகும். ஒரு தனிநபர் லஞ்சம் கேட்பதற்கு உடந்தையாக இருக்கும் அரசு ஊழியர் ஊழல் தடுப்புச் சட்டம், 1988 பிரிவு 10ன் கீழ் ஊழல் செய்தவர் ஆகிறார். ஆனாலும் லஞ்சம் வாங்கி அரசு ஊழியர்கள் கைதாகும் செய்திகள் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன.

pa kavitha - 2026

இந்த நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த கவிதா தற்போது கோகிலாபுரம் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தனது 40வது வயதில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி தேனி மாவட்டத்தில் 300 க்கு 275 மதிப்பெண் பெற்று கிராம நிர்வாக பணியில் சேர்ந்துள்ளார். இவர் 2011 ம் வருடம் பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை லஞ்சம் வாங்காமல் பணி புரிந்து வருகிறார்.

kavitha vo - 2026

இதனால் மேல் இடங்களில் இருந்தும் அவ்வப்போது அழுத்தம் வருவதையும், பிற அதிகாரிகள் இவரை புறக்கணிப்பதும் வாடிக்கையாவே இருந்துள்ளது. இருப்பினும் தனது செயலால், நேர்மையை நோக்கிய பயணத்தில் பல விருதுகளையும், மக்களிடையே சிறந்த நற்பெயரையும் பெற்று சாதித்து உள்ளார்

தனது நேர்மையின் மூலம் மக்கள் மனதை வென்ற இவர், மக்களின் விருப்ப கிராம நிர்வாக அலுவலராக உள்ளார்.

இது குறித்து கவிதா கூறும்போது, “எனது நேர்மை பயணம் சகாயம் ஐயா அவர்களின் பாதையை மையமாகக் கொண்டது, நான் இதுவரை அவரின் நேர்மையை பின்பற்றி வருகிறேன்.

kavitha - 2026

இதனால் நான் பல சங்கடங்களை சந்தித்துள்ளேன். ஆனலும் நேர்மையே எனது உயிர் மூச்சு. நான் நேர்மையை கடைப்பிடிப்பதால் விருதுகளையும் பெற்றுள்ளேன்.

எனது மேஜையில் ‘நேர்மைக்கு துணை ‘ என்ற வாசகமும், ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ என்ற வாசகமும் எப்போதும் இருக்கும். லஞ்சம் இல்லாத நாடே எனது குறிக்கோள் என்றும், எனக்கு எப்போதும் இளைஞர்களின் ஆதரவும் மக்களின் ஆதரவும் உண்டு என்றும், மக்கள் லஞ்சம் தருவதை தவிர்த்து விடுவது எதிர்கால தலைமுறைக்கு உதவியாக இருக்கும் என்கிறார்”, கிராம நிர்வாக அலுவலர் கவிதா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories