லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து: நேர்மையான கிராம நிர்வாக பெண் அலுவலர்!

kavitha 1 - 2026

தேனி மாவட்டம்உத்தமபாளையம் கோகிலாபுரத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரான கவிதா, தனது முதல் பணி நாள் முதல் இன்று வரை கையூட்டு வாங்காமல் பணியாற்றி வருவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அரசு அலுவலர் தனது பணியினை செய்யவோ அல்லது செய்யாமல் இருப்பதற்கு, பிற நபர்களிடம் இருந்து பணம் வாங்குவது லஞ்சமாக பார்க்கப்படுகிறது.

இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி கடும் குற்றம் ஆகும். ஒரு தனிநபர் லஞ்சம் கேட்பதற்கு உடந்தையாக இருக்கும் அரசு ஊழியர் ஊழல் தடுப்புச் சட்டம், 1988 பிரிவு 10ன் கீழ் ஊழல் செய்தவர் ஆகிறார். ஆனாலும் லஞ்சம் வாங்கி அரசு ஊழியர்கள் கைதாகும் செய்திகள் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன.

pa kavitha - 2026

இந்த நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த கவிதா தற்போது கோகிலாபுரம் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தனது 40வது வயதில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி தேனி மாவட்டத்தில் 300 க்கு 275 மதிப்பெண் பெற்று கிராம நிர்வாக பணியில் சேர்ந்துள்ளார். இவர் 2011 ம் வருடம் பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை லஞ்சம் வாங்காமல் பணி புரிந்து வருகிறார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
kavitha vo - 2026

இதனால் மேல் இடங்களில் இருந்தும் அவ்வப்போது அழுத்தம் வருவதையும், பிற அதிகாரிகள் இவரை புறக்கணிப்பதும் வாடிக்கையாவே இருந்துள்ளது. இருப்பினும் தனது செயலால், நேர்மையை நோக்கிய பயணத்தில் பல விருதுகளையும், மக்களிடையே சிறந்த நற்பெயரையும் பெற்று சாதித்து உள்ளார்

தனது நேர்மையின் மூலம் மக்கள் மனதை வென்ற இவர், மக்களின் விருப்ப கிராம நிர்வாக அலுவலராக உள்ளார்.

இது குறித்து கவிதா கூறும்போது, “எனது நேர்மை பயணம் சகாயம் ஐயா அவர்களின் பாதையை மையமாகக் கொண்டது, நான் இதுவரை அவரின் நேர்மையை பின்பற்றி வருகிறேன்.

kavitha - 2026

இதனால் நான் பல சங்கடங்களை சந்தித்துள்ளேன். ஆனலும் நேர்மையே எனது உயிர் மூச்சு. நான் நேர்மையை கடைப்பிடிப்பதால் விருதுகளையும் பெற்றுள்ளேன்.

எனது மேஜையில் ‘நேர்மைக்கு துணை ‘ என்ற வாசகமும், ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ என்ற வாசகமும் எப்போதும் இருக்கும். லஞ்சம் இல்லாத நாடே எனது குறிக்கோள் என்றும், எனக்கு எப்போதும் இளைஞர்களின் ஆதரவும் மக்களின் ஆதரவும் உண்டு என்றும், மக்கள் லஞ்சம் தருவதை தவிர்த்து விடுவது எதிர்கால தலைமுறைக்கு உதவியாக இருக்கும் என்கிறார்”, கிராம நிர்வாக அலுவலர் கவிதா.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories