விருதுநகர்மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண விழா இரண்டாம் நாள் இன்று ஆண்டாள் பல்லக்கில் வீதி உலா வந்தார்.
முன்னதாக ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தன.
10நாள் விழாவில் தினமும் காலை 9:00 மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னார் மண்டபத்தில் எழுந்தருள்கின்றனர். பங்குனி உத்திர திருநாளான மார்ச் 18 காலை 7:00 மணிக்கு செப்புதேரோட்டம், இரவு 7:00 மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது.






