திருவரங்கத்தில் பங்குனி உத்திர விழா..

Published:

ஸ்ரீரங்கத்தில் சுவாமி நம்பெருமாள், ஆதி பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி உத்திரம் விழா மிக பிரபலமான ஒன்றாகும்.வரும் 18ம் தேதி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்க நாச்சியாருடன் சேர்த்தி சேவை நிகழ்வு நடைபெறும்.

IMG 20220314 WA00411 - 2026

இவ்விழாவில் நம்பெருமாள்
ஊர்ஊராகச் சென்று, பக்தர்களுக்கு தாமே வலியச்சென்று  சேவை சாதிக்கிறார். கடந்த 10ம் தேதி தொடங்கிய இவ்விழாவில், 11ம் தேதி ஸ்ரீரங்கத்தில் இருந்து சுமார் 20 கிமீ தூரத்தில் உள்ள ஜீயபுரம் வரை சென்று, வழிநெடுக உள்ள கிராமங்களில் சேவை சாதித்து 12ம்தேதி திரும்பினார். தற்போதைய தார்ச்சாலையைத் தவிர்த்து,  பழைய காவிரிக்கரை சாலை வழியாகவே பெருமாளை சுமந்து செல்லும் அழகே பக்தி பூர்வமாக இருக்கும் (படம்).
பெரும் கூட்டம் உடன் செல்லும்.  நேற்று இரவு ஸ்ரீரங்கத்தில் கருடசேவை. நாளை உறையூருக்கு பயணமாகிறார். இதுவும் பழைய காவிரி பாதையில்தான்.  ஓராண்டில் 3 முறை மட்டுமே சுவாமி நம்பெருமாளின் சேர்த்தி சேவையை தரிசிக்கலாம். நடப்பு பங்குனி விழாவில் நாளை மார்ச் 15ம் தேதி உறையூரில் கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை, வரும் 18ம் தேதி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்க நாச்சியாருடன் சேர்த்தி சேவை. ஆண்டுக்கு
ஒருமுறைதான் இந்த தரிசனம் என்பதால் இதற்கும் பக்தர்கள் பெருங்கூட்டம் இருக்கும்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img