புனலூர் – கொல்லம் ரெயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல்
பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் செங்கோட்டை- கொல்லம் -செங்கோட்டை
ரெயில்கள் மட்டும் மேலும் 5 நாட்களுக்கு ரத்து செய்யப்பவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
புனலூர் – கொல்லம் ரெயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல் பணிகளை விரைவுபடுத்துவதற்காக செங்கோட்டை- கொல்லம் -செங்கோட்டை (06659/06660) விரைவு சிறப்பு ரெயில்கள் பிப்ரவரி 24 முதல் மார்ச் 15-ந்தேதி வரை முழுமை யாக ரத்து செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
மின்மயமாக்கல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த ரெயில்கள் மேலும் 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி செங்கோட்டை -கொல்லம் சிறப்பு ரெயில் (06659) மார்ச் 21-ந்தேதி வரையும், கொல்லம்- செங்கோட்டை சிறப்பு ரெயில் (06660) மார்ச் 22-ந்தேதி வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
நெல்லை- பாலக்காடு, நெல்லை-பாலருவி மற்றும் சென்னை-கொல்லம், சென்னை-கொல்லம் மெயில் ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





