திருக்குறுங்குடியில் அழகிய நம்பிராயர் கோயில் உற்சவம் துவக்கம்

Published:

108 வைணவத் திருத்தலங்களில் பாண்டிய நாட்டுத் திருப்பதிகளில்
பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றான வராக ஷேத்ரமான திருக்குறுங்குடியில் சுவாமி அழகிய நம்பிராயர் – குறுங்குடிவல்லித் தாயார் பங்குனி உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஐந்து நிலைகளில் பரமாத்மா இருப்பதைப்போல்,  இத்தலத்தில், நின்ற நம்பி,  கிடந்த நம்பி,  வீற்றிருந்த நம்பி,  திருப்பாற்கடல் நம்பி,  திருமலை நம்பி என ஐந்து பெருமாள்கள் எழுந்தருளி இருக்கின்றனர்.  இவர்கள் 5 பேரும் மார்ச் 22ம் தேதி ஐந்து கருடசேவை கண்டருள்கின்றனர். அப்போது, ஸக்யாத்ரி எனப்படும் மேற்கு தொடர்ச்சி மலைக்கு காட்சி தருவர்.

இக்கோயில் பங்குனி திருவிழா வில் முக்கிய நிகழ்வாக 27ம் தேதி தேர்த்திருவிழா நடைபெறும்.பகவத் ராமானுஜர் கேரளாவில் பயணம் மேற்கொண்டிருந்த சமயத்தில், இவரது நியமனமான பாஞ்சராத்ர ஆகமத்துக்கு அங்குள்ள நம்பூதிரிகளின் எதிர்ப்பால்,  மலையைக் கடந்து திருக்குறுங்குடிக்கு தான் வந்தார். திருமங்கையாழ்வார் முக்தி அடைந்த தலம் இது. இன்னும் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட திருக்குறுங்குடியில் இன்று பங்குனி உத்திர விழா மற்றும் கொடியேற்றத்தை யொட்டி பக்தர்கள் அதிகளவில் வருகை தந்தனர்.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?
images 81 - 2026

Related articles

Recent articles

spot_img