
தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் டியகோ டி அல்மாக்ரோ என்ற நகரத்தையே இந்த இராட்சத மணற்புயல் தாக்கியுள்ளது.
இவ்வாறு இந்த மணற்புயல் தாக்குதலினால் 9000 வீடுகளில் மின் துண்டிக்கப்பட்டதுடன் 75 வீடுகள் பெரியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இடியுடன் கூடிய ஆலங்கட்டி கனமழை மற்றும் மிகப்பெரிய மணற்புயல் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வானிலை ஆய்வு மையம் முன்னரே அறிவித்ததால் பெரிய உயிர் சேதத்தில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற முடிந்ததாக அப்பகுதி நகர மேயர் மரியோ ரோஜாஸ் தெரிவித்துள்ளார்.
இராட்சத மணற்புயல் வெளியான காணொலி பார்ப்பவர்களை திகிலடைய வைத்துள்ளது.




