மேகாலயாவில் கொரோனா பயம் பீதி அச்சம் காரணமாக கர்ப்பிணிகள் கடந்த இரு ஆண்டு களில் மருத்துவமனையில் சேராததால் 877 பச்சிளம் குழந்தைகள் பலியானதாக மாநில அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இம்மாநிலத்தில், கொரோனா காலத்தில் 877 பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த 61 பெண்கள் உயிரிழந்தனர்.
இது குறித்து முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் தேசிய மக்கள் கட்சி மற்றும் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெறும் மேகாலயா
மாநில அரசிடம் தேசிய மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியது.இதற்கு, அரசு தாக்கல் செய்துள்ள பதில் அறிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டது. பாதிப்பு இல்லாதோருக்கான பிரிவில் சேர்க்க பரிசோதனை அவசியமாக்கப்பட்டது.
ஆனால், கர்ப்பிணியர் பலரும் பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்தனர்; தடுப்பூசியையும் ஏற்கவில்லை. பரிசோதனைக்காக ஆரம்ப சுகாதார நிலையம் வர மறுத்த கர்ப்பிணியரின் வீடுகளுக்கு சென்ற சுகாதார பணியாளர்கள், மருத்துவ ஆலோசனைகளை வழங்கி, அவர்கள் ஆரோக்கியத்தை கண்காணித்தனர்.பிரசவ தேதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன், அவர்களை கண்டிப்பாக மருத்துவமனைகளில் சேர வலியுறுத்தினோம். கொரோனா அச்சம் காரணமாக அவர்கள் வரவில்லை. இதனால், முறையான மருத்துவ கவனிப்பு இல்லாதது, மரணத்திற்கான காரணம் என தெரிய வந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இச்சம்பவம் பொதுமக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





