மே.வங்கத்தில் 8பேர் கொலைசெய்யப்பட்ட கிராமத்தில் மம்தா..

மேற்கு வங்கத்தில் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதில் 8 பேர் உயிரிழந்த சம்பவத்தில் வன்முறை நிகழ்ந்த கிராமத்திற்கு இன்று சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.

gallerye 140715695 2990855 - 2026

மேற்கு வங்கத்தில் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதில் 8 பேர் உயிரிழந்த சம்பவத்தில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று தர வேண்டும். அவர்கள் தப்பி செல்வதற்கு எந்த காரணமும் கூறக்கூடாது என போலீசாருக்கு மம்தா உத்தரவிட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புராட் பகுதியில், ஊராட்சி துணைத்தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டது. அதில், ஒரு வீட்டில் இருந்த 8 பேர் பரிதாபமாக கருகி உயிர் இழந்தனர். சம்பவத்தில் தொடர்புடைய 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கோல்கட்டா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது.

இதனிடையே, வன்முறை நிகழ்ந்த கிராமத்திற்கு சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்கள் மத்தியில் மம்தா பேசியதாவது, மேற்கு வங்கத்தில் காட்டுமிராண்டிதனமான செயல் நடக்கும் என நம்பவில்லை. தாய்மார்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தில் உங்களது குடும்ப உயிரிழந்திருக்கின்றனர். எனது மனமும் நொறுங்கி உள்ளது. வன்முறையில் சதி உள்ளது. சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக்கூறியுள்ளார்.

அருகிலிருந்த உயர் அதிகாரியை வரவழைத்த மம்தா, குற்றவாளிகள் தப்பித்து செல்ல எந்த காரணமும் கூறக்கூடாது. குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். தவறு செய்யும் போலீசார் தண்டிக்கப்படுவார்கள். சாட்சிகள் மீது எந்த தாக்குதலும் நடக்காமல் இருக்க அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கூறிய அவர், சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களிடம் ரூ. 2 லட்சம் நிவாரணத்திற்கான காசோலையையும் வழங்கினார். பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் மம்தா அறிவித்துள்ளார்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories