மே.வங்கத்தில் 8பேர் கொலைசெய்யப்பட்ட கிராமத்தில் மம்தா..

மேற்கு வங்கத்தில் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதில் 8 பேர் உயிரிழந்த சம்பவத்தில் வன்முறை நிகழ்ந்த கிராமத்திற்கு இன்று சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.

gallerye 140715695 2990855 - 2026

மேற்கு வங்கத்தில் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதில் 8 பேர் உயிரிழந்த சம்பவத்தில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று தர வேண்டும். அவர்கள் தப்பி செல்வதற்கு எந்த காரணமும் கூறக்கூடாது என போலீசாருக்கு மம்தா உத்தரவிட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புராட் பகுதியில், ஊராட்சி துணைத்தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டது. அதில், ஒரு வீட்டில் இருந்த 8 பேர் பரிதாபமாக கருகி உயிர் இழந்தனர். சம்பவத்தில் தொடர்புடைய 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கோல்கட்டா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது.

இதனிடையே, வன்முறை நிகழ்ந்த கிராமத்திற்கு சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்கள் மத்தியில் மம்தா பேசியதாவது, மேற்கு வங்கத்தில் காட்டுமிராண்டிதனமான செயல் நடக்கும் என நம்பவில்லை. தாய்மார்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தில் உங்களது குடும்ப உயிரிழந்திருக்கின்றனர். எனது மனமும் நொறுங்கி உள்ளது. வன்முறையில் சதி உள்ளது. சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக்கூறியுள்ளார்.

அருகிலிருந்த உயர் அதிகாரியை வரவழைத்த மம்தா, குற்றவாளிகள் தப்பித்து செல்ல எந்த காரணமும் கூறக்கூடாது. குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். தவறு செய்யும் போலீசார் தண்டிக்கப்படுவார்கள். சாட்சிகள் மீது எந்த தாக்குதலும் நடக்காமல் இருக்க அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கூறிய அவர், சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களிடம் ரூ. 2 லட்சம் நிவாரணத்திற்கான காசோலையையும் வழங்கினார். பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் மம்தா அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories