ஃபாஸ்டா வந்த ரயிலில் பட்டுன்னு விழுந்த இளைஞர்.. சட்டுன்னு பாய்ந்த காவலர்.. பரபர காட்சிகள்!

train 4 - 2026

ரெயிலின் முன் பாய்ந்த 18 வயது இளைஞரை காப்பாற்றும் ரயில்வே காவல் துறை அதிகாரியின் துணிச்சல் மிக்க வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள வித்தல்வாடி ரெயில்வே நிலையத்தில் இந்த சம்பவம் (மார்ச் 23) அன்று நடந்தது.

சம்பவத்தன்று ரெயில் நிலையத்தில் இருந்த 18 வயது இளைஞர் வேகமாக வந்து கொண்டிருந்த ரெயிலின் முன் திடீரென குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனை அங்கிருந்த ரயில்வே காவல் துறையை சேர்ந்த கான்ஸ்டேபில் ரிஷிகேஷ் கவனித்தார். பின், உடனடியாக தண்டவாளத்தில் சீறிப் பாய்ந்த அவர் 18 வயது இளைஞரை துணிச்சலாக மீட்டார். இந்த சம்பவம் முழுக்க அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கிறது.

வீடியோவின் படி, தற்கொலைக்கு முயன்ற இளைஞர் ரெயில்வே பிளாட்பார்மின் ஓரத்தில் நின்று கொண்டு ரெயில் வருகிறதா என்பதை பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறார்.

ரெயில்வே காவல் துறையை சேர்ந்த கான்ஸ்டேபில் ரிஷிகேஷ் மேன் அதே பிளாட்பார்மில் வழக்கம் போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். பணியின் போது, இளைஞர் பிளாட்பார்மின் ஓரத்தில் நின்று கொண்டிருப்பதை கவனிக்கிறார்.

பின் அங்கிருந்து தள்ளி நிற்குமாறு ரிஷிகேஷ், இளைஞரிடம் செய்கையில் வலியுறுத்துகிறார். பின் சில நொடிகளில் ரெயில் வருவதை உறுதிப் படுத்திக் கொண்ட இளைஞர் திடீரென தண்டவாளத்தில் குதித்தார்.

இளைஞர் குதிப்பதை பார்த்த ரிஷிகேஷ், துணிச்சலாக தண்டவாளத்தில் இறங்கி, இளைஞரை தண்டவாளத்தில் இருந்து வெளியே இழுத்து தள்ளினார். பின் அதே தண்டவாளத்தில் மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்து சென்றது

இந்த பரபர சம்பவம் அடங்கிய வீடியோவை செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது.

இதே வீடியோவை ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவானிஷ் ஷரனும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இணையத்தில் வெளியானது முதல் இந்த வீடியோ அதிவேகமாக பரவி, சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிக வியூக்களை பெற்று இருக்கிறது.

ரெயிலின் முன் பாய்ந்து இளைஞரை துணிச்சலாக மீட்ட காவல் துறையை சேர்ந்த ரிஷிகேஷுக்கு நெட்டிசன்கள் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories