December 20, 2025, 5:03 PM
28.6 C
Chennai

ஆந்திராவில் திருமணவிழாவுக்கு சென்ற பஸ் கவிழ்ந்து 8பேர் பலி..

ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே திருமணவிழாவுக்கு சென்ற பஸ் சனிக்கிழமை இரவு பள்ளத்தில் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில்8 பேர் உயிரிழந்தனர். 63 பேர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம்சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனபள்ளி – திருப்பதி நெடுஞ்சாலையில் சனிக்கிழமை இரவு தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. முதல்கட்ட தகவலில், அதிவேகமாக சென்றதால் வளைவில் திரும்ப முடியாமல் பேருந்து பள்ளத்தில் விழுந்து கவிழந்தது தெரியவந்தது. 63 பேர் பயணித்த அந்த பேருந்தில் ஒரு பெண், ஒரு சிறுமி உள்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

320 214 14847974 thumbnail 3x2 and - 2025
202203270918577561 Tamil News 7 people killed and 45 injured in a bus accident last night MEDVPF - 2025

சம்பவ இடத்தில், மீட்புப்பணியில் ஈடுபட்ட வீரர்கள் ஆறு பேரின் சடலத்தை மீட்டுள்ளனர். நாரவரிப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட அந்த எட்டு வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. உயிரிழந்தவர்கள் மலிஷெட்டி வெங்கப்பா (60), மலிஷெட்டி முரளி (45), கந்தம்மா (40), மலிஷெட்டி கணேஷ் (40), ஜெ.யஷஸ்வினி (8), ஓட்டுநர் நபி ரசூல், ஓட்டுநரின் உதவியாளர் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், பேருந்தில் இருந்த மணமக்கள் உள்பட மொத்தம் 45 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பேருந்து அதிவேகமாக சென்ற நிலையில், வளைவில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால், வலதுபுறம் உள்ள 100 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழந்துள்ளது. விபத்துக்குள்ளான பகுதி மிகவும் இருட்டாக இருந்ததால், இரவு 10.30 மணிவரை விபத்து குறித்து அப்பகுதியில் யாருக்கும் தெரியவில்லை. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், மக்களின் அலறல் சத்தம் கேட்டு பள்ளத்திற்குள் பார்த்துள்ளார். விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

மேலும், விரைவாக செயலாற்றி அப்பகுதியில் இருந்த காவலர்களுடன் பைக்கில் வந்த நபரும் முதலில் மீட்புப் பணியில் இறங்கியுள்ளார். விபத்து தகவலை அறிந்த மாவட்ட ஆட்சியர் எம். ஹரிநாராயணன், திருப்பதி நகர காவல் கண்காணிப்பாளர் அப்பல்லா நாயுடு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்வையிட்டனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அயோத்தி: நெடிய போராட்டத்தின் ஒரு வெற்றிச் சரித்திரம்!

ராமனுக்காக வாழ்நாளில் தொண்டு செய்த தமிழர்களில் பின்னாளில் தலையாய தொண்டு செய்தவர் ஆனார் மூத்த வழக்குரைஞர் பராசரன். ராமன் ஆலயம் அமைவதற்காகத் தன் தள்ளாத வயதிலும் உச்ச

தளும்பி வழியும் பிற்போக்குத் தனம்: தில்லி தற்கொலைத் தாக்குதல் பற்றிய கூரிய பார்வை!

அசௌகரியமாக இருந்தாலும் நேர்மையாக - பழி கூறுவது, மறுப்பது என்ற இரண்டு நிலைகளை தவிர்த்து விட்டு - சுய பரிசோதனை செய்யும் சமுதாயத்தினால் மட்டுமே மீண்டும் இதுபோன்ற பயங்கரவாத செயல்கள் நிகழாமல் தடுக்க முடியும்.

IND Vs SA T20: தொடரை வென்ற இந்திய அணி!

டி-20இல் 2000 ரன்கள் எடுத்தார். இந்த டி-20 ஆட்டத்தில் ஹார்திக் 17 பந்துகளில் 50 ரன் சாதனை புரிந்தார். ஆட்ட நாயகனாக் ஹார்திக் பாண்ட்யாவும் தொடர் நாயகனாக வருண் சக்ரவர்த்தியும் அறிவிக்கப்பட்டனர்.    

பஞ்சாங்கம் டிச.20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

Topics

அயோத்தி: நெடிய போராட்டத்தின் ஒரு வெற்றிச் சரித்திரம்!

ராமனுக்காக வாழ்நாளில் தொண்டு செய்த தமிழர்களில் பின்னாளில் தலையாய தொண்டு செய்தவர் ஆனார் மூத்த வழக்குரைஞர் பராசரன். ராமன் ஆலயம் அமைவதற்காகத் தன் தள்ளாத வயதிலும் உச்ச

தளும்பி வழியும் பிற்போக்குத் தனம்: தில்லி தற்கொலைத் தாக்குதல் பற்றிய கூரிய பார்வை!

அசௌகரியமாக இருந்தாலும் நேர்மையாக - பழி கூறுவது, மறுப்பது என்ற இரண்டு நிலைகளை தவிர்த்து விட்டு - சுய பரிசோதனை செய்யும் சமுதாயத்தினால் மட்டுமே மீண்டும் இதுபோன்ற பயங்கரவாத செயல்கள் நிகழாமல் தடுக்க முடியும்.

IND Vs SA T20: தொடரை வென்ற இந்திய அணி!

டி-20இல் 2000 ரன்கள் எடுத்தார். இந்த டி-20 ஆட்டத்தில் ஹார்திக் 17 பந்துகளில் 50 ரன் சாதனை புரிந்தார். ஆட்ட நாயகனாக் ஹார்திக் பாண்ட்யாவும் தொடர் நாயகனாக வருண் சக்ரவர்த்தியும் அறிவிக்கப்பட்டனர்.    

பஞ்சாங்கம் டிச.20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

வாழ்க்கை என்பது எதைப் போன்றது தெரியுமா?

"வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் அதை நோக்கிப் புன்னகைக்கும்போது சிறந்த பலன்களைப் பெறுகிறோம்."

தீபம் ஏற்ற வழியில்லை; விரக்தியில் உயிர்த் தியாகம் செய்த பூர்ணசந்திரன் இழப்புக்கு நீதி வேண்டும்!

பூரணசந்திரன் மரணத்திற்கு நீதிகேட்போம். முருகபக்தர்களே அணி திரண்டு வாரீர்: நெல்லை மாநகர் இந்து முன்னணி அழைப்பு!

ஹனுமத் ஜயந்தி; ஒரு லட்சம் வடை மாலையுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் தரிசனம்!

அனுமனின் அவதாரத் திருநாளான இன்று ஆஞ்சநேயரை தரிசிக்கவும் பிரசாதமாக வடையைப் பெற்றுக்கொள்ளவும் பக்தர்கள் பலர்  ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்தனர்.

Entertainment News

Popular Categories