ஹைதராபாத் அருகே ரூ1,800 கோடியில் உருவான லஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் ..

தெலங்கானா மாநிலத்தில்,ஹைதராபாத் நகரத்தில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள யாதகிரிகுட்டா லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

தெலங்கானா மாநிலம்  யாததிரி புவனகிரி மாவட்டதில் யாதகிரிகுட்டா எனும் குன்றின் மீது  நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. யாதகிரி குட்டா ஹைதராபாத் நகரத்தில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள இக்கோயில் புராண காலச் சிறப்பை கொண்டதாகும். இக்கோயிலை தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் புதுப்பிக்க முடிவு செய்தார். ஆந்திர மாநிலப் பிரிவினைக்குப் பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆந்திராவுக்கு சென்றதால் தெலங்கானா மாநிலத்தில் லஷ்மி நரசிம்மர் கோயிலை, ஏழுமலையான் கோயில் போன்று அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.  

இதற்காக 2016ம் ஆண்டு  முதல்வர் சந்திரசேகர ராவ் ரூ1,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். நாட்டின் மிகப்பெரிய ஆலயத் திட்டமாகக் கருதப்பட்ட அயோத்தியா ராம் மந்திரைவிட அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது.  பிரமாண்டமாக 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயில் ஆகம விதிப்படியும், காக்கத்தியர் கட்டிடக்கலையினைப் பின்பற்றியும் 2,50,000 டன் கருப்பு கிரானைட் கற்களைக் கொண்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் இந்த ஆலய வளாகத்தில் ஏழு கோபுரங்கள், விரத பீடம், சுவாமிக்கான பூந்தோட்டம், கல்யாண மண்டபம், சத்திரங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. மேலும் 12 ஆழ்வார்களைக் குறிக்கும் வகையில் 12 மிகப்பெரிய தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. கோபுரங்களில் மொத்தம் 52 தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கலசம் அமைக்கும் பணியைச் சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டது. கடந்த ஐந்தரை ஆண்டுகளாக ரூ1,280 கோடிசெலவில், கோயிலின் புனரமைப்பு பணிகள் நடத்தப்பட்டன. பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் கோயில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முதல்வர் சந்திரசேகரராவ், அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்
கும்பாபிஷேகத்தில் அனைவரும் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

images 2022 03 29T114733.779 - 2026
images 2022 03 29T114624.370 - 2026
images 2022 03 29T114704.504 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories