அண்ணாமலை பல்கலை, தொலைநிலை படிப்புகளில மாணவர்கள் சேர வேண்டாம்..

Published:

அங்கீகாரம் வழங்கப்படாததால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், தொலைநிலை படிப்புகளில மாணவர்கள் சேர வேண்டாம் என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை தொலைநிலை படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பது ஒழுங்குமுறை விதிகளை மீறும் செயல் ஆகும்.

2014 -15ம் ஆண்டு வரை மட்டுமே அண்ணாமலை பல்கலைக்கு தொலைநிலை படிப்புக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

வேலைவாய்ப்பு கிடைக்காமல் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும் குறிப்பிட்ட பல்கலையே முழு பொறுப்பேற்க வேண்டும்.என சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.க்கு தொலைநிலை படிப்புகளுக்கான அங்கீகாரம் வழங்கப்படாததால் யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொர்பாக யுஜிசி செயலர் ரஜனீஷ் ஜெயின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் யு.ஜி.சி., அங்கீகாரம் பெறாமல், தொலைநிலை படிப்புகளில் மாணவர்களை சேர்த்து வருகிறது. 

இது, தொலைநிலை படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகளை முழுமையாக மீறும் செயல் ஆகும். யு.ஜி.சி. அங்கீகாரம் பெறாமல், எந்த உயர் கல்வி நிறுவனமும், தொலைநிலை, திறந்த நிலை மற்றும், ஆன்லைன் படிப்புகளை நடத்த அனுமதி கிடையாது.  2014- 15ம் ஆண்டு வரை மட்டுமே, தொலைநிலை படிப்புகளை நடத்த அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. 

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

அதன்பின், அந்த படிப்புக்கு அங்கீகாரம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, யு.ஜி.சி., அங்கீகாரம் பெறாமல், அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் படிப்புகள் செல்லத்தக்கதல்ல. அந்த படிப்புகளுக்கும், அதனால், வேலைவாய்ப்பு கிடைக்காமல் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும், அந்த பல்கலையே முழு பொறுப்பாகும். 

எனவே, அப்பல்கலை நடத்தும் தொலைநிலை படிப்புகளில், மாணவர்கள் சேர வேண்டாம். அங்கீகாரம் பெறாத பட்டப் படிப்புகளில், மாணவர்களை சேர்த்து வருவது மிகவும் ஆபத்தானது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

images 2022 03 29T152829.674 - 2026

Related articles

Recent articles

spot_img