ஏப்ரல் 1ந்தேதி முதல் வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது என மத்திய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நெடுஞ்சாலை ஆணையம் கூறியிருப்பதாவது,
வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டணத்தை உயர்த்துவதாக நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், மத்திய அரசு கட்டணத்தை உயர்த்துவது குறிப்பிடத்தக்கது.இது வாகன உரிமையாளர் கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.





