நாகர்கோயில் டிஎஸ்பி வீட்டில் இன்றும் ரூ5லட்சம் பணம் பறிமுதல்…

நாகர்கோயில் டி.எஸ்.பி. தங்கவேலு தங்கியிருந்த வீட்டில் இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கி நடந்த சோதனையில் ரூ.5 லட்சம் பணம் சிக்கியது.
12 மணி நேரம் நடந்த சோதனைக்கு பிறகு டி.எஸ்.பி. தங்கவேலின் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து மொத்தம் ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் புன்னை நகரைச் சேர்ந்தவர் சிவகுரு குற்றாலம் ( 66). இவர் புன்னை நகர் மற்றும் நாகர்கோவில் கோர்ட் ரோடு பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். தொழில் அதிபரான இவர் வெள்ளிச்சந்தை அருகே நிலம் வாங்குவதற்காக இரண்டு நபர்களிடம் ரூ.1½ கோடி பணம் கொடுத்தார். பணத்தை வாங்கிய பிறகு அவர்கள் நிலத்தை எழுதிக் கொடுக்கவில்லை.

இதுகுறித்து சிவகுரு குற்றாலம் நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக டி.எஸ்.பி. தங்கவேலு (55) விசாரணை நடத்தினார். அப்போது சிவகுரு குற்றாலம் கொடுத்த வழக்கை விரைந்து முடிக்க ரூ.10 லட்சம் லஞ்சம் தரவேண்டும் என்று டி.எஸ்.பி. தங்கவேலு கேட்டுள்ளார்.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

இந்த நிலையில் பணம் கொடுத்தவர்கள் சிவகுரு குற்றாலத்திற்கு நிலத்தை எழுதி கொடுத்தனர். இதை அறிந்த டி.எஸ்.பி. தங்கவேலு சிவகுரு குற்றாலத்தை தொடர்புகொண்டு நான் பேசியதால்தான் நிலத்தை உடனடியாக எழுதிக் கொடுத்தார்கள். எனவே எனக்கு நீங்கள் ரூ.5 லட்சம் தரவேண்டும் என்று கேட்டுள்ளார். பணத்தை கொடுக்க விரும்பாத சிவகுரு குற்றாலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

இதையடுத்து நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.5 லட்சம் பணத்தை ரசாயன பவுடர் தடவி சிவகுரு குற்றாலத்திடம் கொடுத்து அனுப்பினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் இருந்த டி.எஸ்.பி. தங்கவேலிடம் தொழில் அதிபர் சிவகுரு குற்றாலம் ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. பீட்டர்பால் இன்ஸ்பெக்டர்கள் பெஞ்சமின், ரமா, சிவசங்கரி ஆகியோர் டி.எஸ்.பி. தங்கவேலுவை கைது செய்தனர். பின்னர் அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மாலை 6.30 மணிக்கு தொடங்கிய விசாரணை இன்று அதிகாலை 3 மணிவரை நடந்தது. சுமார் 9 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்கவேலிடம் குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

ALSO READ:  டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

பின்னர் ராமன்புதூர் சந்திப்பில் உள்ள டி.எஸ்.பி. தங்கவேலு தங்கியிருந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இன்று அதிகாலை துவங்கிய சோதனையில் ரூ.5 லட்சம் பணம் சிக்கியது.

அந்தப் பணம் குறித்து டி.எஸ்.பி. தங்கவேலிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கேட்டனர். அவர் பணத்தை தனது நண்பரிடம் வாங்கியதாக கூறினார். அந்த நண்பர் யார்? என்ற விவரங்களை போலீசார் கேட்டனர். அதற்கு அவர் சரியான பதிலளிக்கவில்லை.

12 மணி நேரம் நடந்த சோதனைக்கு பிறகு டி.எஸ்.பி. தங்கவேலின் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து மொத்தம் ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்கவேல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். லஞ்சம் கேட்டு வாங்குதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட தங்கவேலுவை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்

கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி. தங்கவேல் கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். போலீஸ் டி.எஸ்.பி. ஒருவரே லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..
DSP Arriested - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Topics

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories