நீட் தேர்வு நேரம் அதிகரிப்பு..கட்டணமும் உயர்வு..

Published:

நீட் நுழைவுத்தேர்வு
கடந்த ஆண்டு 3 மணி நேரம் மட்டுமே நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமை
இந்த ஆண்டிற்கான நீட் தேர்வுக்கான கட்டணத்தையும் அதிகரித்து உத்தரவிட்டு உள்ளது .

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு நீட் தேர்வு வருகிற ஜூலை 17-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு நடந்தது வருகிறது.

தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் (neet.nta.nic.in) சென்று மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும். நாடு முழுவதும் தமிழ் உள்பட 13 மாநில மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

மாணவர் கள் ஆன்லைனில் பதிவு செய்யும்போது மொழியையும் தேர்வு செய்ய வேண்டும். நீட் தேர்வுகள் ஓ.எம்.ஆர். தாள்கள் மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நீட்தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும் என்று தேர்வு எழுதுவதற்கான நேரம் 200 நிமிடங்களாக 3 மணிநேரம் 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

கடந்த ஆண்டு 3 மணி நேரம் மட்டுமே தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வுக்கான கட்டணத்தை தேசிய தேர்வு முகமை
அதிகரித்து உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் எனப்படும் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்தாண்டு நடைபெற உள்ள தேர்விற்கான கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இதன்படி அனைத்து பிரிவினரும் கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.100 -ஐ அதிகமாக கட்ட வேண்டும். பொது பிரிவினருக்கான கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.1,600 ஆகவும், இ.டபிள்யூ.எஸ், மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கான கட்டணம் ரூ.1,400-ல் இருந்து ரூ.1,500 ஆகவும், மாற்றுத்திறனாளிகள், தாழ்த்தப்பட்டோர், மூன்றாம் பாலினத்தவருக்கான கட்டணம் ரூ.800- ல் இருந்து 900 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைத்து பிரிவினருக்குமான கட்டணமாக ரூ.8,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன்வழி கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி., உள்ளிட்ட கட்டணங்களை தேர்வர்கள் தனியே செலுத்த வேண்டும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!
images 11 - 2026

Related articles

Recent articles

spot_img